தக்காளி சந்தை வரலாற்றில் ஒரு மாதத்துக்கும் மேல் நீடிக்கும் விலை உயர்வு: தமிழகத்தில் குறைவது எப்போது?

மதுரை: தக்காளி சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திராவுக்கு தமிழக தக்காளி செல்வதால் கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் மழையால் தக்காளி அழிந்ததால் தமிழக தக்காளிக்கு வரவேற்பு கூடியுள்ளதால் தக்காளி விலை குறையாமல் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தக்காளி சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக விலை உயர்வு நீடிக்கும் நிலையில் நேற்று மதுரையில் ஒரு கிலோ தக்காளி … Read more

வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்’ இயக்கம் தொடங்கப்படும். இதன்படி, அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி செல்ஃபி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஒலிபரப்பான 103-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நேரிட்டன. இந்த … Read more

சும்மா தெறிக்கும், காத்திருங்க – வெங்கட் பிரபு அப்டேட்

'லியோ' படத்தில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஜய். நேற்று வெங்கட் பிரபுவின் டுவிட்டர் தளத்தில், “ஆக, அடுத்து என்ன… நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்,” என்று பதிவிட்டிருந்தார். ரசிகர்கள் பலரும் அது விஜய்யின் 68வது படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் ஆக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், அது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற வேறொரு படம் … Read more

Burnt musical instruments in Afghanistan | ஆப்கனில் எரிக்கப்பட்ட இசை கருவிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹெராத்,-ஆப்கானிஸ்தானில், பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்களை, தலிபான் அமைப்பினர் தீயிட்டு எரித்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, 2021 ஆகஸ்டில் ஆட்சி அதிகாரத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து, பெண்கள் தனியாக வெளியே செல்லவும், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும், அழகு நிலையங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் இசை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. … Read more

Meena – முத்த காட்சிக்கு ரெடியாக சொன்ன இயக்குநர்.. அம்மாவிடம் அழுத மீனா

சென்னை: Meena (மீனா) அவ்வை சண்முகி படத்தில் முத்த காட்சிக்கு ரெடியாகும்படி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்னதும் தனது தாயிடம் மீனா அழுதிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். இரு துருவங்களுடன்: இதனையடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் … Read more

ஒழுக்கமே ஆயுதப்படைகளின் 'ஹால்மார்க்' – சுப்ரீம் கோர்ட்டு கருத்து

புதுடெல்லி, ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் 8 முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை விடுப்பு எடுத்திருந்தார். பின்னர் மேலும் 30 நாட்கள் விடுப்பு பெற்ற அவர், அதன் பிறகும் பணியில் சேரவில்லை. தனது மனைவிக்கு உடல் நலமில்லை எனக்கூறி தானாகவே விடுப்பை நீட்டித்தார். இவ்வாறு அவர் அடிக்கடி விடுப்பை நீட்டித்து வந்ததால் அவர் மீது விசாரணை நடத்திய ராணுவம் அவரை பணியில் இருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர் சுப்ரீம் … Read more

'வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம்; யாராவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை பேட் செய்திருக்க வேண்டும்' – டிராவிட் கருத்து

பிரிட்ஜ்டவுன், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.5 ஓவர்களில் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் … Read more

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தசம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், … Read more

மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்று கூறுவது பொய் – கனிமொழி எம்.பி.

டெல்லி: “மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறைகள் வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே, அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று கூறுவது பொய்” என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு … Read more

பொது சிவில் சட்டம் குறித்து 1 கோடி கருத்துகள் – சட்ட ஆணையத்தின் கால அவகாசம் முடிந்தது

புதுடெல்லி: நாட்டில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சமர்ப்பிக்க 22-வது சட்ட ஆணையம் அழைப்பு விடுத்தது. இதன்படி கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்குள் கருத்துகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கருத்துகளை சமர்ப்பிக்க மேலும் 2 வாரங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த 28-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் … Read more