'சிறுகதைகள் படித்தால் நன்றாக திரைக்கதை எழுதலாம்' – இயக்குனர் மிஷ்கின்

''ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கான திரைக்கதை சிறப்பாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்,'' என்கிறார் இயக்குனர் மிஷ்கின். சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், சிறுகதைகள் குறித்து ஆழ்ந்த இலக்கிய ரசனையுடன் பேசி, வாசகர்களின் கைதட்டல்களை பெற்றார். அவர் பேசியதாவது: கதை எழுதுவது கடினமான விஷயம். நான் 11 திரைக்கதைகள் எழுதி இருக்கிறேன். திரைக்கதையை பொறுத்தவரை 10 நிமிடங்களுக்குள் ஏதாவது திருப்பங்கள் வந்து கொண்டே … Read more

The Bangladeshi capital is the battleground of opposition clashes with the police | போலீசாருடன் எதிர்க்கட்சியினர் மோதல் போர்க்களமான வங்கதேச தலைநகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: ,-வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை போலீசார் தடுத்தி நிறுத்தியபோது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2018ல் நடந்த பொதுத்தேர்தலில், ஷேக் ஹசீனா, ஓட்டுப்பதிவில் மோசடி … Read more

Venkat prabhu: தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும்.. ட்வீட்டில் மாஸ் கிளப்பிய வெங்கட்பிரபு!

சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். இதுகுறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதனிடையே படத்தின் பூஜை, சூட்டிங் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். தற்போது வெளிநாட்டில் சுற்றுலாவில் உள்ள விஜய் நாடு திரும்பியதும் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடையூறு இருக்கக்கூடாது – சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து

கவுகாத்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அசாமில் புதிய சட்டசபை கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற கோவிலில் ஒவ்வொரு முக்கிய பிரச்சினை குறித்தும் விவாதங்கள், பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் இருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் எந்தவித இடையூறும், முட்டுக்கட்டையும் இருக்கக்கூடாது’ என்று கூறினார். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருந்து மக்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக … Read more

பார்முலா1 கார்பந்தயத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பென்

ஸ்பா, இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.052 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) ஒரு மணி 22 நிமிடம் 30.450 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அவர் … Read more

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35 பேர் பலி.! 150 பேர் படுகாயம்

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இன்று இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் என்றும், 150 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார். மனித வெடிகுண்டு மூலம் … Read more

மதுரையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி டோல்கேட் ஊழியர் உயிரிழப்பு: இருவர் காயம் 

மதுரை: மதுரை பாண்டிகோயில் அருகே கட்டுபாடு இழந்த லாரி டோல்கேட் எதிர்திசைக்கு மாறி மோதியதில் ஊழியர் ஒருவர் உடல் சிதைந்து பலியானார். இந்த விபத்தின்போது லாரி கார் மீதும் மோதியதால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மதுரை பாண்டிகோயில் சந்திப்பு அருகே சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மஸ்தான்பட்டி சுங்கச்சாவடி செயல்படுகிறது. ராமநாதபுரம் , தென்மாவட்டங்கள், கேரளா, திருவனந்தபுரம் செங்கோட்டை போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வானங்கள் அதிகமாக செல்வதால், குறிப்பிட்ட நேரத்தில் இந்த சுங்கச் … Read more

சித்தராமையாவை விமர்சித்த பாஜக பெண் நிர்வாகி கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே தனியார் கல்லூரியில் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாணவிகளை க‌ல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி சகுந்தலா (32) கர்நாடக முதல்வர் சித்தராமையாவையும் அவரது குடும்பத்தினரையும் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ் பெங்களூரு ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீஸார் சகுந்தலா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, … Read more

கதை சொல்வதற்கு முன்பே ரஜினிக்கு அதிர்ச்சி தந்த நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மூன்று படங்கள் மட்டுமே இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு முதல் இரண்டு படங்களின் வெற்றி தான் இந்த ஜெயிலர் பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஆனால் அவரது மூன்றாவது படமான பீஸ்ட், ஜெயிலர் அறிவிப்புக்கு பின் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரது கையை விட்டுப் போகவில்லை. படத்தையும் இயக்கி முடித்து விட்டார். … Read more

Russia closes airport after drone attack in Moscow | மாஸ்கோவில்் ட்ரோன் தாக்குதல் விமான நிலையத்தை மூடியது ரஷ்யா

மாஸ்கோ, ஜூலை 31- ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா, ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் … Read more