நான்கு மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிவிப்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை செப்டம்பர் 1ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

நாளை மறு தினம் (செப்டம்பர் 2) கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து மேலும் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 6ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.