வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டம்: வேற லெவலில் மாறும் தென் தமிழகம்… ரெடியாகும் பெரிய ஜாக்பாட்!

இந்திய அளவில் மூன்று பெரிய துறைமுகங்ளை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. இந்த துறைமுகங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். எனவே இங்கே உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த துறைமுகங்களை மேம்படுத்துவது மிகவும் அவசியம்.

வியாபாரிகள் குவிந்ததால் கலை கட்டிய நாகை மீன்பிடித் துறைமுகம்

தூத்துக்குடி துறைமுகம்

மேலும் தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசின் பங்களிப்பு அவசியம். தாராளமான நிதியுதவி வழங்கினால் தான் சிறப்பான முறையில் செயல்பட முடியும். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் ஒன்று என கவனம் பெறுகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

விரிவாக்கத் திட்டப் பணிகள்

இது தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. எனவே வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது பல்வேறு நன்மைகளை விளைவிக்கும். குறிப்பாக தமிழகம் மற்றும் பரந்த தென்னிந்திய பிராந்தியத்திற்கு ஒரு முழுமையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இந்த துறைமுக விரிவாக்க திட்டம் நடைமுறைக்கு வரும் போது, தொழில் மயமாக்கலுக்கு கணிசமான ஆதரவு கிடைக்கும்.

தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் எண்ணற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான உற்பத்தி அலகுகளை ஈர்க்கும். இதன்மூலம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். நாட்டிலேயே உற்பத்தித் துறையில் 2வது அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்த சூழலில் வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டம் ஆனது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றும்.

அதிகப்படியான ஜி.எஸ்.டி

இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் கணிசமான செலவினங்களை குறைக்கும். விலை மதிப்பற்ற அந்நியச் செலாவணியை குறைக்கும். எனவே வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி அதிகமாக செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு.

சென்னையில் உச்சி மாநாடு

அதனால் தமிழகத்திற்கு மத்திய அரசு அதிகப்படியான நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை கிண்டியில் மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனவால் அவர்கள் தலைமையில் குளோபல் கடல்சார் இந்திய உச்சி மாநாடு சாலை கண்காட்சி நடைபெற்றது.

மத்திய அரசுக்கு கோரிக்கை

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.