'இதுவரை நாம் கண்டிராத மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளது' – அமெரிக்க தூதர் பேச்சு

புதுடெல்லி,

20-வது இந்திய-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியா மிகவும் வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை நடத்தியிருப்பதாக புகழாரம் சூட்டினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

“இந்தியாவின் அற்புதமான வளர்ச்சியும், உயர்வும், உலகில் அதன் தலைமைத்துவமும் சேர்ந்து இதுவரை நாம் கண்டிராத வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளது. இந்தியாவிற்கு இது ஒரு அற்புதமான விண்வெளி ஆண்டு. நிலவின் இருண்ட பக்கத்தில் இந்தியா தரையிறங்கியுள்ளது. இதற்கு முன்பு வெறும் நான்கு நாடுகள் மட்டுமே செய்ததை, மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் இந்தியா செய்துள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.