விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று அவரது குடும்பத்தாரிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி சங்கத் தலைவர் ஆர்கே செல்வமணி ஆகியோர் விசாரித்துள்ளார்கள். தொடர்ந்து தீவிர … Read more

Actor Vijay: ஹீரோவாக 31 ஆண்டுகளை கடந்த விஜய்.. ரசிகர்கள் கொண்டாடும் தளபதி!

சென்னை: நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டில் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக தன்னுடைய 10வது வயதிலேயே வெற்றி என்ற படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார் விஜய். அந்தப்படத்தை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சினிமாவில் தன்னுடைய 31 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி

சிக்கிம் வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்ததாக அறிவிப்பு

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடந்த அக்டோபர் 4-ந்தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இதில் தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் 46 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மேலும் 77 பேரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் சுமார் 2 மாதங்கள் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அந்த 77 பேரும் இறந்ததாக … Read more

சச்சின் அல்ல…இவர் தான் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் – பாகிஸ்தான் வீரர்

கராச்சி, நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் ரோகித் மற்றும் விராட் கோலியின் பேட்டிங் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. மைதானத்தில் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு கேப்டன் ரோகித் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவில் சிறந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தான் என கூறியுள்ளார். சச்சின் மற்றும் கோலி இருவரில் … Read more

ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுங்கள்: மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனையிட்டதில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்தது

  மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனையிட்டதில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்தது மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு … Read more

“இது தவறான முன்னுதாரணம்” – அமலாக்கத் துறை அலுவலக சோதனை குறித்து தமிழிசை கருத்து

புதுச்சேரி: அசாம் மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர் மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்திருந்த அசாம் மாநிலத்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: “நான் முழு நேர ஆளுநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்களை சென்று பார்ப்பதில் என்ன தவறென்று எனக்கு தெரியவில்லை. மக்களை நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். கேள்வியும் கேட்கின்றனர். நேரடியாக … Read more

24 வயது ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம்

பாட்னா: பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சே்ரந்தவர் கவுதம் குமார். இவர் அண்மையில் நடைபெற்ற மாநில அரசு பணியாளர் ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு ஒரு கும்பல், கவுதம் பணியாற்றும் பள்ளிக்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. மேலும்கடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள், துப்பாக்கி முனையில் தனது மகளுக்கு செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவர் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமண ஏற்பாடுகளை … Read more

Miqjam storm reverberations: Emergency advisory meeting | மிக்ஜாம் புயல் எதிரொலி: அவசர ஆலோசனை கூட்டம்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ‘மிக்ஜாம்’ புயல் அவசர ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி முன்னிலையில், நேற்று நடந்தது.இதில், செய்யூர் வட்டாட்சியர் சரவணன், செய்யூர் எம்.எல்.ஏ., பாபு, லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். … Read more

மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கிறார் . இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக உருவாகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கப்பல் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். … Read more