கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக பதவியேற்றவர் விஜயதரணி. சட்டசபையில் காங்கிரஸ் முதன்மை கொரடா, காங்கிரஸ் அகில இந்திய மகளிரணி அணி பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியானது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு கேட்டு டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பேசியதாகவும், ஆனால், விஜயதரணிக்கு சீட் கொடுப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பதாலும், சீனியாரிட்டி அடிப்படையில் சீட் கொடுக்காமல் தன்னை புறக்கணிப்பதாகவும் விஜயதரணி கருதியதாக சொல்லப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைவிட, ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் விஜயதரணி ஆர்வம் காட்டிவந்ததாக சொல்லப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தால் அதிகபட்சமாக எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருக்க முடியும்.
அடுத்த கட்டத்துக்கு நகரவும் வாய்ப்பு இல்லை. பா.ஜ.க-வில் இணைந்தால் மாநிலங்களவை எம்.பி ஆவதுடன், மத்திய அமைச்சர் வரை செல்லலாம் என்ற எதிர்கால திட்டமிடலுடன் விஜயதரணி காய்நகர்த்துகிறார் என அரசியல் வடாரத்தில் பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில்தான், டெல்லி சென்றிருந்த விஜயதரணி இன்று பா.ஜ.க-வில் இணைந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் இருந்தார். மேலும் பாஜக-வில் இணைந்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் டெல்லியில் தெரிவித்தார்.
விஜயதரணி கட்சி மாறியதன் காரணமாக, கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் அவர் மீது நடவடிக்கை பாயும். பாஜகவில் விஜயதரணி இணைந்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY