கனடாவில் நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறோம்..

அண்மையில் கனடாவில் இலங்கையர் ஒருவரால், இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நாடு என்ற ரீதியில் அதிர்ச்சியும் துயரமும் அடைகின்றேன் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் அந்த குடும்பத்தினருக்காக அரசு ஏதேனும் உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் சாத்தியமான அனைத்து விடயங்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் தீவிரமாக தலையிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.