மதுரை தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என கனிமொழி கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது கனிமொழி, ”மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழகத்தை மதிப்பது கிடையாது. தமிழகம் மழை,வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனா ஆக்கிரமித்துப் பெயர் மாற்றமே செய்து விட்டது. இதைப் பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது. […]