ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது; அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை – நியூ. முன்னாள் வீரர்

மும்பை,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ஐ.பி.எல். தொடக்க ஆட்டங்களில் ஹர்திக் பாண்ட்யா அதிக அளவில் பந்து வீசினார். ஆனால், அதன்பின் பெரும்பாலான ஆட்டங்களில் ஹர்திக் பந்து வீசவில்லை.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூசிலாந்து முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டூல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் முதல் வீரராக பந்துவீசி ஹர்திக் பாண்ட்யா அடையாளம் பதித்தர். ஆனால், தற்போது ஹர்திக் பந்து வீசுவதில்லை. ஹர்திக் இடம் ஏதோ சரியில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அதை ஹர்திக் ஒப்புக்கொள்வதில்லை. ஹர்திக் இடம் ஏதோ சரியில்லை என்பது நிச்சயம் எனக்கு தெரியும். இதை என் உள்ளுணர்வு கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.