Vidya Balan: "எனது முன்னாள் காதலன் என்னை ஏமாற்றினார்! அதனால்…" – மனம் திறந்த வித்யா பாலன்

பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ள `தோ அவுர் தோ பியார்’ (Do Aur Do Pyaar) படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனுடன் இலியானா, பிரதிக் காந்தி, செந்தில் ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஷிர்ஷா குஹா தாக்கூர்தா இதை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் புரொமோஷன் தொடர்பாக வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் தனது முன்னாள் பாய்பிரெண்ட்கள் பற்றியும், அவர்களுடன் டேட்டிங் சென்றது குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார்.

Do Aur Do Pyaar

அதில், “நான் முதல் முறையாகக் காதலித்த பையன் என்னை ஏமாற்றிவிட்டான். அவனுடன் பிரேக் அப் ஆன புதிதில் அவனைக் கல்லூரியில் காதலர் தினத்தன்று சந்தித்தேன். அவன் என்னிடம் அவனது முன்னாள் காதலியை டேட்டிங்கிற்காக சந்திக்கப்போகிறேன் என்று தெரிவித்தான்.

அந்த நாளில் அவன் என்னை நொறுக்கிவிட்டான். ஆனால் நான் இப்போது என் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறேன். ஆனால் முதல் காதலன் என்னை ஏமாற்றியது எனக்குள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனது வேகத்தை நொறுக்குவதாகவும், வலி மிகுந்ததாகவும் இருந்தது.

ஆனால் அந்தப் பின்னடைவுதான் நான் முன்னேற வழிவகுத்தது. நான் அடிக்கடி டேட்டிங் செல்பவள் கிடையாது. சிலருடன் டேட்டிங் சென்றிருக்கிறேன். ஆனால் நான் சீரியஸாகவும், அதிக நாள்களும் டேட்டிங் செய்தவரையே திருமணமும் செய்து கொண்டேன்” என்றார்.

Vidya Balan

வித்யா பாலன், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வித்யா பாலன் அடுத்ததாக ‘Bhool Bhulaiyaa’ படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்கவிருக்கிறார். அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான முதல் பாகத்தில் வித்யா பாலன்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

பாலக்காட்டைச் சேர்ந்த வித்யா பாலன் தன் கரியரின் ஆரம்ப நாள்களில், பல விளம்பர படங்களில் நடித்தவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.