`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! – வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி

புதுச்சேரியில் ஒவ்வோர் ஆண்டும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 2024-24 ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்தது. அதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது … Read more

சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயம்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் வரும் ஆக.31 முதல் செப்.1-ம் தேதி வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” ஆக.30 முதல் செப்.1 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி … Read more

ஆபரேஷன் பேடியா: உ.பி.யில் 7 பேரைக் கொன்ற ஓநாய்களில் ஒன்றைப் பிடித்த வனத்துறை!

பஹ்ரைச்: உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றுவிட்டு, 15 பேரை காயப்படுத்திய ஓநாய்களில் ஒன்றை வனத் துறையினர் வியாழக்கிழமை பிடித்துள்ளனர். மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓய்நாய்களைப் பிடிப்பதற்காக வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற ஒன்றை தொடங்கி இருந்தது. இன்று பிடிபட்ட ஓநாயுடன் வனத்துறையினர் இதுவரை நான்கு ஓநாய்களைப் பிடித்துள்ளனர். இது குறித்து ஆபரேஷன் பேடியாவின் பொறுப்பாளரான பராபங்கி பிராந்திய வனத்துறை அதிகாரி, ஆகாஷ்தீப் பதவான் கூறுகையில், “சிசாய்யா சூடாமணி கிராத்தின் … Read more

தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: காசாவில் 24 மணி நேரத்தில் 68 பேர் பலி!

டெல் அவில்: காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள முக்கிய இடங்களான ரஃபா, பெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. குறிப்பாக, வெஸ்ட் பேங்கில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேலிய ராணுவத்தினர் புதன்கிழமையன்று அப்பகுதியில் நுழைந்து தாக்குதல் … Read more

Nepotism: "நான் சினிமாவிற்குள் நுழையும்போது வாரிசு நடிகர்களின் தொல்லை இல்லை!" – பரத் ஓபன் டாக்

‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தலைமைச் செயலகம் வெப் சீரிஸுக்கு பிறகு நடிகர் பரத்தின் அடுத்த ரிலீஸ் இதுதான். இதில் அபிராமி, பவித்ரா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் நல்ல திரைப்படங்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் நடிகர் பரத். இந்த நிகழ்வில் பேசிய பரத், “நான் நெப்போடிஸம் பகுதியெல்லாம் தாண்டி வந்துட்டேன். … Read more

அரசியல் குறித்து அயல்நாட்டுக்கு படிக்கச்சென்றுள்ள அண்ணாமலையை விமர்சிக்கும் வீடியோ… ஷேர் செய்த செல்லூர் ராஜீ

அரசியல் குறித்து படிக்க அயல்நாட்டுக்குச் சென்றுள்ள அண்ணாமலையை நையாண்டி செய்து சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் செல்லூர் ராஜீ பகிர்ந்துள்ளார். ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பிற்காக நேற்று இங்கிலாந்து சென்றார் அண்ணாமலை. ஐ.பி.எஸ். முடித்து கர்நாடக காவல்துறையில் பணியாற்றி வந்த அண்ணாமலை தனது பணியை செய்ய மனமில்லாமல் அரசியலில் இறங்கினார். பாஜக-வில் சேர்ந்து தனது அரசியலை தொடர்ந்த இவரை தமிழ்நாடு மாநில தலைவராக்கி அழகு பார்த்தது தேசிய தலைமை. அரவக்குறிச்சி … Read more

காசாவில் ஐநா அதிகாரிகள் பயணித்த கார் மீது தாக்குதல்! முக்கிய செயல்பாடுகள் நிறுத்துவதாக அறிவிப்பு

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவில் ஐ.நா உணவு நிறுவனத்தின் (WFP) வாகனம் ஒன்று திடீரென தாக்குதலுக்கு உள்ளானது. இப்படி நடப்பது முதல் முறை என்பதால், WFP காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. Source Link

நடிகர் விஷால் முதலில் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்தட்டும்.. லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகைமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் தற்போது நடந்து வரும் விஷயம் நன்மைக்குத்தான் என்று கூறியுள்ளார். கேரள திரையுலகம் இந்த விஷயத்தை தைரியமாக வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்

ட்ரையம்ப் Daytona 660 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரூ.9.72 லட்சம் விலையில் டேடோனா 660 சூப்பர் ஸ்போர்ட் பைக் மாடல் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 3 சிலிண்டர் கொண்ட 660 சிசி இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ட்ரையம்ப் டேடோனா 660 பைக்கில் 660cc மூன்று சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் … Read more

இந்திய நிதியுதவியின் கீழ் நெடுந்தீவு, நைனாத்தீவு மற்றும் அனலைத்தீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான முதல் கட்ட நிதியை இந்தியா நேற்று (28) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சேபாலா ஆகியோரிடம் இது கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டன. அத்துடன் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி … Read more