சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு கவுன்சிலர் சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஐம்பது லட்சம் மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் மேலும் ஒருவர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]