Ultraviolette F77 Super Street – அல்ட்ராவைலெட் F77 சூப்பர்ஸ்டீரிட் விற்பனைக்கு அறிமுகமானது.!

அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் F77 சூப்பர்ஸ்டீரிட் பைக்கில் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ ஆக உள்ளது.

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா சோனியா… எதிர்வினையாற்றிய ராஷ்டிரபதி பவன்; நடந்தது என்ன?

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று காலை தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு, “அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய மந்திர்’ நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் … Read more

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை: ”திருப்பரங்குன்றம் விவாரத்தில் இந்து – முஸ்லிம் சகோதரர்களிடையே அமைதியை ஏற்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது,” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கையை வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணி பேருந்து நிலையம் சீரமைப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். … Read more

‘கண்ணியத்துக்கு காயம்’ – சோனியா கருத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகை எதிர்வினை

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிகழ்த்திய உரை குறித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ‘உயர் பதவியின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரை குறித்து ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் … Read more

அதிதி ஷங்கருக்கு அவரது அப்பா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Aditi Shankar Talks About Condition By Her Father : வளர்ந்து வரும் நடிகை, அதிதி ஷங்கருக்கு, அவரது அப்பா போட்ட கண்டீஷன் குறித்த தகவல் தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'மதகஜராஜா' வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் பழைய படங்கள்; ஜி.தனஞ்செயன் பட்டியலிடும் படங்கள் என்னென்ன?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் புது டிரெண்ட்டை துவக்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்படம், பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பல்வேறு நல் உள்ளங்களின் முயற்சியினால் ‘மதகஜராஜா’ திரைக்கு வந்து, பெரும் வெற்றி பெற்றது. இப்போது தெலுங்கிலும் வெளியாகிறது. Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம் சமீபத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார், ”படம் எடுக்கப்பட்டு தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டால் அந்த படம் ஓடாது என்ற வறட்டு வாதத்தை … Read more

9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசு

சென்னை தமிழக அரசு 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது. இன்று தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”*நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம்; புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் *தருமபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் * திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம். *கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ்குமார் நியமனம் * விழுப்புரம் மாவட்ட கலெக்டராக ஷேக் … Read more

ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' – காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கு விசாரணை குறித்து காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்திருக்கிறார். “கடந்த 25 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த சம்பவம் சமூக … Read more

மதுரை மாநகராட்சியில் போதுமான கார், ஜீப் இல்லையா?

மதுரை: மதுரை மாநகராட்சியில் போதுமான கார், ஜீப்கள் இல்லாததால் உயர் அதிகாரிகளின் கள ஆய்வுக்கு தனியார் ‘டாக்ஸி’களை வாடகைக்கு எடுப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையில் ரூ.28 லட்சத்து 56 ஆயிரம் வழங்க மாநகராட்சியின் ஒப்புதலுக்குத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு தனித்தனியாக கார் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர துணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள், கல்வி அலுவலர், உதவி ஆணையர் (வருவாய்), உதவி ஆணையர் (கணக்கு), … Read more