IAS ஆவது ஈசி-திரைப்படம் எடுப்பது கஷ்டம்! அனிமல் பட இயக்குநர் பேச்சால் பரபரப்பு..

Sandeep Reddy Vanga Statement About IAS Receives Backlash : இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார், பிரதீப் ரெட்டி வங்கா. இவர், சமீபத்தில் ஐ.ஏ.எஸ் ஆவது சுலபம், படம் எடுப்பது கடினம் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

8லட்சம் மாணவ மாணவிகள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது… உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது இன்று மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதையொட்டி,  கல்வித்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று  (03.03.25) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது. நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும்  3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்2 தேர்வு குறித்த தங்களது அச்சங்கள், விளக்கங்களை மாணவர்கள் மற்றும்பெற்றோர்கள்  94983 … Read more

New VOLKSWAGEN TERA SUV debuts – ஃபோக்ஸ்வேகன் டெரா எஸ்யூவி இந்திய சந்தைக்கு வருமா..!

பிரேசிலில் ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள புதிய டெரா காம்பேக்ட் எஸ்யூவி நவீனத்துவமான வசதிகளுடன் MQ A0 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ளது. டெரா காரினை முழுமையாக அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து விபரங்களையும் வெளியிடவில்லை. இந்திய சந்தைக்கு வருமா என்ற கேள்விக்கான விடை அதிகாரப்பூர்வமாக ஃபோக்ஸ்வேகன் அறிவிக்கவில்லை என்றாலும் ஸ்கோடா கைலாக் மாடலை பின்பற்றியே டெரா வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்திய சந்தைக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. டெராவின் நீளம் 4 மீட்டருக்கு குறைவாக அமைந்திருப்பதுடன் … Read more

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை… வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

Doctor Vikatan: என் தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்து அவளுக்கு பெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும் இப்படியே இருந்துவிட்டால் என்ன செய்வது என புலம்புகிறாள். குழந்தைகள், இப்படி முடி இல்லாமல் பிறப்பது சகஜம்தானா…. பிற்காலத்தில் சரியாகிவிடக் கூடிய பிரச்னையா இது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம் சரும நல சிகிச்சை மருத்துவரும், கப்பிங் தெரபி நிபுணருமான தலத் சலீம் குழந்தைகள் பிறக்கும்போது இருக்கும் தோற்றத்தை வைத்து, அவர்களின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். முடி … Read more

ரமலான் நோன்பு தொடங்​கியது: மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை: ரமலான் நோன்பு நேற்று தொடங்​கியதையொட்டி, மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்​தினர். இஸ்லாமியர்​களின் 5 முக்கிய கடமை​களில் ரமலான் நோன்பு கடைபிடிப்​பதும் ஒன்றாகும். ரமலான் நோன்பு தொடங்​கு​வதற்கான பிறை பிப்​.28-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை), சென்னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட​வில்லை. எனவே, மார்ச்​.2-ம் தேதி (ஞாயிற்றுக்​கிழமை) ரமலான் நோன்பு தொடங்​கு​கிறது என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்​தார். இதைத்​தொடர்ந்து, நேற்று ரமலான் நோன்பு தொடங்​கியது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு … Read more

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் கவலை

புதுடெல்லி: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில் தொழிலாளர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சியைவிட வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தெரிகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கை 34.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம்பள தரவுகளை ஆய்வு … Read more

காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம்

டெல் அவிவ்: ​காசாவுக்கு செல்​லும் உதவிப் பொருட்​கள் விநி​யோகத்தை இஸ்ரேல் நிறுத்​திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் தீவிர​வா​திகள் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளனர். பாலஸ்​தீனத்​தில் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இஸ்ரேலுக்​கும் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்​டது. அதன்​பிறகு இரு தரப்​பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்​கப்​பட்​டனர். முதல்​கட்​டமாக மேற்​கொள்​ளப்​பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனிக்​கிழமை முடிவடைந்​தது. அதற்கு முன்ன​தாகவே 2-ம் கட்ட சண்டை நிறுத்தம் குறித்து பேச்சு​வார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் தீவிர​வா​திகள் அறிவித்​தனர். பதில் இல்லை: … Read more

Suzhal 2:“மணிகண்டன் அதைப் பண்ணியே ஆகணும்!'' – புஷ்கர் & காயத்ரி பேட்டி

இயக்குநர் புஷ்கர் – காயத்ரி எழுத்தில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது, `சுழல்’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசன். இரண்டாவது சீசனின் ரிலீஸையொட்டி புஷ்கரையும் காயத்ரியையும் சந்தித்துப் பேசினோம். அனைத்துக் கேள்விகளுக்கும் இருவரும் இணைந்தே பதில் அளித்தனர். “எங்களுக்கு அமேசான் கூட ஒரு நல்ல புரிதல் இருக்கு. இன்னும் ஏதாச்சும் பண்ணுங்கன்னுதான் சொல்வாங்க. தொடரை மேம்படுத்த மட்டும் தான் ஏதாச்சும் பரிந்துரைப்பாங்க. முதல் சீசன் எழுதி முடிச்சதுக்கு அப்புறம் எங்களுக்கு இந்தி கமிட்மென்ட்ஸ் இருந்தது. … Read more

கோவை: வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு – கையும் களவுமாக சிக்கிய 2 பெண்களின் பகீர் பின்னணி

கோவை மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.  வெளி மாவட்ட இளைஞர்கள் தொடங்கி காவல்துறை அதிகாரி வரை பலர் இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பீளமேடு போலீஸார் கைது செய்துள்ளனர். செயின் பறிப்பு திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணவேணி (37) மற்றும் அபிராமி (36). இவர்கள் சுய உதவி குழுக்கள் மூலம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அதை … Read more

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்

சென்னை: மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது. நாடு முழு​வதும் உள்ள மத்திய பல்கலைக்​கழகங்கள் மற்றும் அதன்​கீழ் இயங்​கும் கல்லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்டப்​படிப்பு​களில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் நடத்தி வருகிறது. அதன்​படி, அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை … Read more