கொரோனா தொற்றால் ஒருவர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக  குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா குறித்து  மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு என்றும் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் … Read more

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" – வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா, இப்போது இந்தியப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். Priyanka Chopra Jonas பிரியங்கா சோப்ரா இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது … Read more

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அடுத்த கோபால்பட்டி வாரச்சந்தையில் இன்று (மே 31) ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களில் அசைவ விருந்து அளிப்பதற்காகவும், ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே 31) … Read more

கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘உலகை கவலையடையச் செய்வது எது?’ எனும் தலைப்பில் கடந்த மே மாதம் தாங்கள் நடத்திய கணக்கெடுப்பு குறித்த தகவல்களை ‘இப்ஸோஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தேசிய அளவில் இந்திய அரசின் மீதான நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய பதிப்பில், தேசிய அளவிலான நம்பிக்கை 62% … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ் – மாதம் ரூ.2000 உதவித் தொகை

Tamilnadu Government : டிகிரி முடித்த மாணவர்கள் மாதம் ரூ.2000 உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

குஜராத் பிளேயர் குசல் மென்டிஸ் மீது ரசிகர்கள் வைத்த மேட்ச் பிக்சிங் புகார் – உண்மை என்ன?

Kusal Mendis : ஐபிஎல் 2025 தொடரின் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான இரண்டாவது குவாலிஃபையர் அல்லது முதலாவது எலிமினேட்டர் போட்டி நியூ சண்டிகர் முலான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கும், தோல்வி அடையும் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் என்ற பரபரப்பான நிலையிலேயே இரு அணிகளும் களம் கண்டன. போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி … Read more

எம்.பி. பதவிக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை  கமல்ஹாசன் சந்திப்பு நன்றி தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,   மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இரண்டு தொகுதிகள் அதிமுகவுக்கு … Read more

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா | Automobile Tamilan

ரூ.975 கட்டணத்தில் யமஹா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான சாலையோர அவசரகால உதவியை (Roadside Assistance – RSA) இந்தியாவில் 40 ஆண்டுகால கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் அறிவித்துள்ளது. RSA திட்டம் விரிவான நன்மைகளை வழங்குகிறது, அவற்றில் பின்வருவன அடங்கும்: பழுதடைந்தால் அல்லது விபத்து ஏற்பட்டால் வாகனத்தை எடுத்துச் செல்வதற்கான வசதி செயலிழந்த பேட்டரிகளுக்கு பேட்டரி ஜம்ப்ஸ்டார்ட் உதவி பஞ்சர் அல்லது டயர் சேதத்தின்பொழுது உதவி சிறிய பழுதுபார்க்கும் சேவைகள் அவசரநிலைகளில் மருத்துவ உதவி புதிய … Read more

PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' – அன்புமணி திட்டவட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், ” கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐயா நம்முடைய குலசாமி, குலத்தெய்வம். ஐயா கட்சியின் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது. அன்புமணி – ராமதாஸ் நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். கட்சியினர் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் சுற்றுப்பயணம் … Read more

தமிழக பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுவதா? – அன்புமணி கண்டனம்

சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50%-க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30% பணியிடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. … Read more