ஓடிடியில் வெளியாகிறது மாமன்.. எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

Maaman OTT Release Date: நடிகர் சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் மரணம்! தவெக தலைவர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.54 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.25 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,69.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் … Read more

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்வு

மேட்டூர், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இந்த நீர்வரத்தானது நேற்று மாலையில் வினாடிக்கு … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுகிறாரா..? வெளியான புதிய தகவல்

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி … Read more

61 வயதில் காதலியை கரம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

ரோம், இத்தாலியின் வெனிஸ் நகரில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனை கரம்பிடித்தார். அதேசமயம் திருமணத்தால் நகரம் மாசுபடுவதாக கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். உலக பெரும்பணக்காரரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ் 2020-ம் ஆண்டு தனது மனைவி மெக்கன்சி ஸ்காட்டை விவாகரத்து செய்தார். 61 வயதான ஜெப் பெசோஸ் அதன் பிறகு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்செசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களை சுற்றினர். இந்தநிலையில் … Read more

“மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' – மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்ஸ்மென்ரின்(7) என்ற மகளும் உள்ளனர். பென்குரூஸ் கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் படித்துவருகிறான். டிக்ஸ்மென்ரின் பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். டார்வினும், அவரது மனைவி பபிதா நித்யசெல்வி ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று முன் தினம் பகல் முழுவதும் அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. … Read more

திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

திருச்சி: திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு இன்று (29-ம் தேதி) அதிகாலை 1.28-மணிக்கு, திருச்சி விமான நிலைய இயக்குநர் மற்றும் திருச்சியில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையம் சார்ந்தவர்களின் மின்னஞ்சல்களுக்கு, “வெடிபொருட்கள் உடனடியாக வெளியேறுங்கள். விமான நிலையம் மற்றும் விமானங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளகுப்பைகளுக்குள் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தை … Read more

புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இதற்கு அலட்சியப் போக்கே காரணம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். “புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் கூட்ட நெரிசல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தது, சுமார் 50 பேர் காயமடைந்தது மிகுந்த வேதனை தருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை … Read more

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் புதிய படம்! மாஸாக வெளியான அறிவிப்பு!

2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி. இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.