குமரியில் அதிர்ச்சி.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்!

கன்னியாகுமரியில் கணவர் மனைவியைக் கொன்றுவிட்டு, இறந்த பிறகு அவருடன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்சிபி பிளேயர், எப்ஐஆர் பதிவு – முழு விவரம்

Yash Dayal sexual harassment case : ஆர்சிபி அணிக்காக முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள். இவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். யாஷ் தயாளுக்கு எதிராக அந்த பெண் கொடுத்த புகாரில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திலும் முறையான … Read more

மூத்த குடிமக்களுக்கான குட் நியூஸ்! சுகம்யா பாரத் செயலி அப்டேட் செய்த மத்திய அரசு

Sugamya Bharat App : இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் சுகம்யா பாரத் செயலியைபயனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாட்பாட் தளம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் அனைத்தும் … Read more

தற்போதைக்கு வீடுகளுக்கு மின் கட்டண உயர்வில்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் சிவசங்கர் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு தற்போது இல்லை என அறிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்” … Read more

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ரத யாத்திரை நேற்று முன் தினம் தொடங்கியது. திருவிழா 9 நாட்கள் நடைபெறும். மூன்று தேர்களும் முதல்நாள் மாலையிலேயே ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு செல்லவேண்டியது. ஆனால் பாலபத்திரர் தேர் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது நகர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் பின்னால் வந்த மற்ற தேர்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் நேற்று காலை மீண்டும் ரத யாத்திரை தொடங்கியது. … Read more

டி.என்.பி.எல். வரலாற்றில் 2-வது அணியாக மாபெரும் சாதனை படைத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

திண்டுக்கல், 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் கோவை, சேலம், நெல்லையில் நடந்தன. இதனையடுத்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.எல். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் … Read more

விமான நிலைய ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடி: விமானங்கள் ரத்து

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் யமகதா மாகாணம் ஹிகஷின் நகரில் விமான நிலையம் உள்ளது. உள்நாட்டு விமான நிலையமான இங்கிருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் கரடி புகுந்தது. ஓடுதளத்தில் கரடி சுற்றித்திரிந்ததால் விமானங்கள் புறப்பட முடியாமலும், தரையிறங்க முடியாமலும் திணறின. இதனால், 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை தற்காலிமகாக நிறுத்தப்பட்டது. பின்னர், விமான நிலையத்திற்கு அருகே இருந்த வனப்பகுதிக்குள் கரடி … Read more

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி நடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய ஏழு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று TNPL வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது அணியாக மாறியுள்ளது. இதற்கு முன் … Read more

மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதுடன் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்: அன்புமணி

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு … Read more

தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வமான அறிக்கையை பார்த்தோம். அதில் ஜூன்28-ல் நடந்த வஜீரிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டி உள்ளது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிக்கிறது. அதோடு கண்டனமும் தெரிவிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 … Read more