“மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார், ஆனால் நான்…'' – மோடி மேடையில் உமர் அப்துல்லா ஆதங்கம்

ஸ்ரீநகர்: “மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஆனால், நான் பதவி இறக்கம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தனது கவலையை தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர … Read more

'இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையது' – அமித்ஷா

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;- “இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையது. ஒரு மொழி இல்லாமல் இன்னொரு மொழியின் வளர்ச்சி சாத்தியமாகாது. ஆறுகள் ஒன்றிணைவது போல் நமது மொழிகள் ஒன்றிணைந்து இந்திய கலாசாரம் என்ற கங்கையை உருவாக்குகின்றன. இந்திய மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாகும். கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாகும். இந்திய மொழிகள் பிரிவு அனைத்து மொழிகளுக்கும் … Read more

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுபற்றி சித்தராமையா, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு … Read more

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் தொழிற்சாலை அழிப்பு

பெரூட், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று … Read more

நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ‘அன்றைய தினம் சென்னையில் கனமழை … Read more

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி

ஸ்ரீநகர்: மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” என்று அவர் உறுதி அளித்தார். ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் … Read more

ஜூன் 11ல் வேலூர், தருமபுரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை:  தமிழ்நாட்டில், தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜூன் 11ந்தேதி அன்று வேலூர், தருமபுரி உள்பட  9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,” என  தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை.. வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 10ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை … Read more

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து: குஜராத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கைது

காந்தி நகர், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. அதேவேளை, இந்தியாவின் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ஆண்டின் 2-வது ‘கிராண்ட்ஸ்லாம்’ தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி – ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லோரென்சோ முசெட்டி கைப்பற்றினார். 2வது மற்றும் 3வது செட்டை அல்காரஸ் கைப்பற்றினார் . 4வது செட்டில் 2-0 என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது … Read more

வியட்நாமில் பைக் விபத்து: இந்திய மருத்துவ மாணவன் பலி

ஹனோய், ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த மாணவ, மாணவியர் பலர் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, தெலுங்கானா மாநிலம் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷித் அஷ்ரித் (வயது 21). இவர் வியட்நாமின் கென் தொ நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், அர்ஷித் நேற்று தனது நண்பருடன் கென் தொ நகரில் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை … Read more