ADMK : 'கூட்டணி ஆட்சி; கறாராக 'நோ' சொல்லும் எடப்பாடி! – பின்வாங்குமா பா.ஜ.க?

‘கூட்டணி ஆட்சி சர்ச்சை!’ அதிமுக – பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி திரியைக் கொளுத்திப் போட்டார் அமித் ஷா. அப்போது உண்டான புகைச்சல் இன்னுமே ஓயவில்லை. எடப்பாடி பழனிசாமி ‘எடப்பாடியின் மெசேஜ்!’ நேற்று, கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது உள்ளக் கிடக்கை மொத்தமாக போட்டு உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘எங்களை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது. அதிக … Read more

அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கெனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்யமான … Read more

மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மனோஜித் மிஸ்ரா, பிரதிம் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளதாக இந்த சம்பவத்தை விசாரிக்கும் 9 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிறப்புப் … Read more

இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

531 கோடி: 2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 15 கோடி பேர்: இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கெனப் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் படும் ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) தளத்தைச் சுமார் 15 கோடி இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 4 செயலிகள்: உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் … Read more

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Nellai local holiday: நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

CSK மினி ஏலத்தில் வாங்கப்போகும் இந்த வீரர்… ஓப்பனிங்கில் இனி பிரச்னை இல்லை!

Chennai Super Kings: ஐபிஎல் 18வது சீசன் (IPL 2025) நிறைவடைந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால் அதற்கு ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் குறித்த பேச்சுகளும், வீரர்கள் டிரேடிங் குறித்த பேச்சுகளும் தற்போது கிசுகிசுக்க தொடங்கிவிட்டன எனலாம்.  வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. இதற்கு முன் வீரர்கள் டிரேடிங் நடைபெறும். அந்த வகையில், சிஎஸ்கே – ராஜஸ்தான் அணிகள் (CSK RR Trading) இடையே டிரேடிங் நடைபெற … Read more

Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' – இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா

10 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘கில்லர்’. இந்தப் படத்தில் ‘அயோத்தி’ பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த வாரம் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டிருந்த நிலையில் படத்திற்கானப் பூஜை நடைபெற்று இருக்கிறது. ‘கில்லர்’ படம் அதுதொடர்பானப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘கில்லர்’ படத்தின் மூலம் இயக்குநர் பயணத்தைத் … Read more

நாளை முதல் ரயில்வே புதிய விதிகள்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

How to link Aadhaar with IRCTC account: ரயில் பயணங்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது பயணிகள் தட்கல் டிக்கெட் மூலம் தங்களின் டிக்கெட்தாய் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். இதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் நாம் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது சாமானிய மக்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகும். பொதுவாக … Read more

8 பேரை பலி கொண்ட தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து

சங்காரெட்டி தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் விபத்தில் 8 பேர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர். சங்காரெட்டி மாவட்டம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணி நேரத்தில் ரியாகடர் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது., வெடிப்பு ஏற்பட்ட போது  aகட்டிடத்தில் மொத்தம் 61 பேர் இருந்துள்ளனர், மேலும் பலர் இன்னும் உள்ளே சிக்கியுள்ளனர். “மீட்கப்பட்டவர்களில் சிலர் கவலைக்கிடமாக காயமடைந்துள்ளனர். உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை,” என்று … Read more

போராட்டக்காரர்களின் கால்களை உடையுங்கள்; உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதார் கோவில் ரத யாத்திரை கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த … Read more