ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் வட்டி விகிதமாகும். இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் RBI பயன்படுத்தும் முறையாகும். ரெபோ விகிதம் குறையும்போது, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இந்தாண்டில் 3-வது … Read more

இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி, இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரி டேவிட் லாமி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதன்படி, பிரதமர் மோடியை அவர் இன்று சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டேவிட் லாமியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. நம்முடைய விரிவான தூதரக நட்புறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட பெரிய அளவில் பங்காற்றியதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். சமீபத்தில் நிறைவடைந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

பெங்களூரு , குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் … Read more

கிரீஸ்: ஏதோஸ் மலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் வடக்கே ஏதோஸ் மலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. காரியெஸ் நகரில் இருந்து வடமேற்கே மிக குறைந்த ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன்படி, நிர்வாக தலைநகரான காரியெஸ் நகரில் இருந்து வடமேற்கே 7.7 மைல்கள் ஆழத்தில் அது மையம் கொண்டிருந்தது. புவியக இயக்கவியலின் ஏதென்ஸ் அமைப்பு வெளியிட்ட செய்தி இதனை தெரிவிக்கின்றது. இதுபோன்று பூமியின் மேற்பரப்பு அருகே ஏற்படும் … Read more

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் பேசி முடிவு செய்யப்படும்: திடீர் பயணமாக சென்னை வந்த ராமதாஸ் தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், உட்கட்சி பிரச்சினையை … Read more

சூட்கேஸில் பெண் சடலம் வழக்கு: 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள பூச்சுபல்லி எனும் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனாதையாய் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பாலாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த சூட்கேஸில் சுமார் 30 … Read more

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு தல சிறப்பு : சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல் : கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும் கோயில் பிரகாரத்தில காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. தலபெருமை : இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும், பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் அரியநாச்சி அம்மன். செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம் ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய் வெள்ளி என்றில்லாமல் தினமும் … Read more

தொழில்நுட்பக் கோளாறு; சாலையில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு பராசு பகுதியில் இருந்து இன்று மதியம் 12.52 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி அந்த ஹெலிகாப்டரை சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கினார். அதில் இருந்த 5 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானிக்கு சிறு … Read more

டி.என்.பி.எல்.: திருச்சியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் கடைசி … Read more

டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ்(DOGE) துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு … Read more