ஆசிய கோப்பை: சுப்மன் கில்லை அணியில் சேர்க்க இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் சேர்க்கப்பட்டதோடு, அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதம் கிளப்பி உள்ளது.  Add Zee News as a Preferred Source இந்த நிலையில், கடந்த வருட ஜூலை மாதத்திற்குப் பிறகு, ஒரு ஆண்டுக்கும் மேல் டி20 போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த வீரரை நேரடியாக அணியில் எடுத்துக் கொண்டு அதன் மேல் துணை கேப்டனாக நியமித்தது … Read more

அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர  வீடுகளுக்குள் வெள்ளம்  புகுந்த நிலையில்,   பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (வயது 32). கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் தங்கநகையை மறைத்து எடுத்து வந்தார். விசாரணையில் அவர் தங்கம் கடத்தியது … Read more

இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காக அவர் இன்னும் 10 வருடங்கள் விளையாட வேண்டும் – கலீல் அகமது

மும்பை, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 2027 உலகக்கோப்பை (50 ஓவர்) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார். இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் … Read more

இலங்கை: செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கொழும்பு, இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த உள்நாட்டு போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். பலர் காயமடைந்தனர். உள்நாட்டு போரின்போது 1998-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற ராணுவ வீரர் ஒருவரால் யாழ்ப்பாணம் மாவட்டம் செம்மணி என்ற இடம் மனித புதைகுழி என முதன்முதலாய் அம்பலப்படுத்தப்பட்டது. அங்கு நடந்த அகழாய்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் சில எலும்புக் கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது … Read more

அடேங்கப்பா! OpenAI-இல் வேலை வாய்ப்பு…சம்பளம் ரூ.3.45 கோடி வரை!

OpenAI Is Hiring: ChatGPT-க்கு AI எழுதுகிறதாம், ஆனால் அதற்கான Content Strategist யாராக இருக்கிறார்? OpenAI ரூ.3.45 கோடி சம்பளத்தில் மனித உள்ளடக்க நிபுணரை ஆட்சேர்ப்பு செய்யும் அறிவிப்பு சமூக ஊடகங்களில் சூடாக பேசப்படுகிறது.

The Rock: ஆளே மாறிப்போன டுவெய்ன் ஜான்சன்; ரசிகர்கள் ஷாக் ஆக காரணம் என்ன?

செப்டம்பர் 1ம் தேதி வெனிஸ் திரைப்படவிழாவுக்கு சென்ற ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான தி ஸ்மாஷிங் மிஷின் (The Smashing Machine) இந்த திரைப்படவிழாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. அனால் அவர் இணையத்தில் பேசு பொருளாக இருக்க அது காரணமல்ல. The Smashing Machine தி ராக் என அழைக்கப்படும் ஜான்சன் கட்டுமஸ்தான உடற்கட்டு கொண்டவர். சினிமாவிலும், சண்டை நிகழ்ச்சியிலும் அவரது உடலமைப்பு அவரது அடையாளமாக இருந்துள்ளது. இந்த … Read more

கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை

தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்​திணை- தொல்​குடி​யினர் வேளாண்மை மேலாண்​மைத் திட்டத்தின்​கீழ், கால்​நடை வளர்ப்பு மூலம் பழங்​குடி​யின விவசாயிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் முன்​னோடித் திட்​டம், தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக் கழகத்​துடன் (டானு​வாஸ்) இணைந்து பழங்​குடி​யினர் நலத்​துறை​யால் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்​றும் விழுப்​புரம் மாவட்​டங்​களில் உள்ள 1,000 பழங்​குடி​யின குடும்​பங்​களை இலக்காகக் கொண்ட இத்​திட்​டம் பெண்​கள், சுய உதவிக் குழுக்​களின் திறன் மேம்​பாட்டை மைய​மாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்​ளது. பழங்​குடி​யின குடும்​பங்​கள் எதிர்​கொள்​ளும் … Read more

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஜராங்கே – மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி என அறிவிப்பு!

மும்பை: மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார். மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர்கள் இன்று பிற்பகல் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை அடைந்து, மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் ஆசாத் மைதானத்தை காலி செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை எதிர்கொண்டுள்ள … Read more

ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு … Read more