ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. முன்கூட்டியே வீடு தேடி வரும் பொருட்கள்!

Latest News On Ration Card: தாயுமானவர் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறளாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் 2025 நவம்பர் 3,4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் பயணம் நிறைவடைந்தது!

Chennai Open WTA 250: ‘WTA 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர், முதலிரண்டு நாள்கள் (அக். 27, அக். 28) மழையால் ரத்தானது. அதைத் தொடர்ந்து, ஒற்றை பிரிவு, இரட்டையர் பிரிவின்  போட்டிகள் நேற்று முன்தினம் (அக். 29) தொடங்கின.  Add Zee News as a Preferred Source முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி பாமிடிபாட்டி, சகாஜா யமலப்பள்ளி ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். … Read more

Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி?

ஒரு தனியார் தொலைக்காட்சியில், நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தொகுத்து வழங்கும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த நடிகரைப் பார்வையாளராக வந்த எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடுகிறார். தொடர்ந்து, மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் அழகர், அடுத்த ஐந்து நாள்களில் ஐந்து பேரைக் கொல்லப்போவதாகவும் அறிவிக்கிறார். அது நேரலை நிகழ்ச்சி என்பதால் மொத்த தமிழ்நாடும் பற்றி எரிகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இதை விசாரிக்க காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பி (விஷ்ணு விஷால்) … Read more

கோவையில் 20.72 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி  உள்ளது. இந்த மைதானம்,  பொது-தனியார் பங்களிப்பு முறையில்  செயல்படுத்தப்பட உள்ளது. இதில்,  சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் இருக்கைகள்  அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து … Read more

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்ற இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-20 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரில் வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. பீகாரில் 64 சதவீத மக்கள், நாள் ஒன்றுக்கு 66 ரூபாயுடன் வாழ்ந்து வருவதாக வெளியான புள்ளிவிவரமே அதற்கு சாட்சி. நல்லது நடக்க மாற்றம் அவசியம். இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய … Read more

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

மும்பை, இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி – போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். இவர்களில் ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து … Read more

அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

மாஸ்கோ, சோவியத் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே 1990-களில் பனிப்போர் நிலவியது. இதனால் இருநாடுகளும் அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து போரில் சோவியத் ரஷியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து அது ரஷியாவாக பிரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள ஐ.நா. அமைப்பால் தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை … Read more

BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்…' – அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார். இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25 பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட … Read more

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்​போது, “நெம்​மேலி குடிநீர் திட்​டத்​தை, முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்டு​ வந்​தார்” என பேசி​னார். அப்​போது திமுக கவுன்​சிலர்​கள், … Read more

இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

நாலந்தா: ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறு​வதை மறுக்​கும் தைரி​யம் பிரதமர் மோடிக்கு இல்​லை’’ என ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு நாளந்​தா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: பிஹாரில் தற்​போது வினாத்​தாள் கசிவு சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இங்கு சுகா​தார கட்​டமைப்பு மிக மோச​மாக உள்​ளது. பிஹாரில் தற்​போது நிலங்​களே இல்​லை. அனைத்​தை​யும், ஒரு … Read more