கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் … Read more

நயன்தாரா-கமல் சேர்ந்து நடிக்காதது ஏன்? கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத வாய்ப்பு..

Reason Why Nayanthara Never Acted With Kamal : இந்திய சினிமாவின் லெஜண்ட் நடிகராக இருப்பவர், கமல்ஹாசன். தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், நயன்தாரா. தங்களது திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் இவர்கள் இருவருமே, இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. அது ஏன் தெரியுமா?  

திருவள்ளூர் ரயில் சேவை ரத்து: வரும் 23ம் தேதி எந்தெந்த ரயில்கள் ஓடாது? -முழு விவரம்

Chennai Thiruvallur Train Service: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23 ஆம் தேதி திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

அரபிக்கடலை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். மேலும் அடுத்த 5 நாளில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்துள்ளது. … Read more

உ.பி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் மணியர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொலு ராஜ்பார் (வயது 22). இவர் அதேகிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜுன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். … Read more

2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

நேப்பியர் , நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று … Read more

லெபனான் எல்லைக்குள் சுவர் எழுப்புவதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

பெய்ரூட், இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர். இதனால் லெபனான் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்தது. பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் கடந்த ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே 2022-ல் காசாவுடனான போர் தொடங்கியதில் இருந்தே தனது வடக்கு எல்லையை இஸ்ரேல் பலப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக லெபனானின் யாரோன் பகுதியில் இஸ்ரேல் சுவர் எழுப்பியது. இந்த சுவர் தங்களது எல்லையை தாண்டி வருவதாக லெபனான் … Read more

"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" – K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை – ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் ‘வனமும் வாழ்வும்’ என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். … Read more

இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனு நிராகரிப்புக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் மனைவியின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களுக்கு பிறகு பரஸ்பர விவாகரத்து கோரி அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது,கணவன் இந்து என்றும், … Read more

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிர​தாப் கோரிக்கை

பாட்னா: பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது. லாலு​வுக்கு சிறுநீரகம் தானம் செய்​தவரும் அவரது இரண்​டாவது மகளு​மான ரோகிணி ஆச்​சார்யா, தனது தம்பி தேஜஸ்​வி​யின் கூட்​டாளி​களால் தாம் பெற்​றோர் வீட்​டில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​தாக கடந்த ஞாயிற்​றுக்​கிழமை குற்​றம் சாட்​டி​னார். இதற்கு முன் லாலு​வின் மூத்த மகன் தேஜ் பிர​தாப் கடந்த மே மாதம் கட்​சி​யில் இருந்​தும் குடும்​பத்​தில் இருந்தும் நீக்​கப்​பட்​டார். தனிக்​கட்சி … Read more