கிங்ஸ் அணி வெற்றி

புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் சார்பில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்-சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை, நடந்த ஆட்டத்தில் ஈகிள்ஸ் அணியும்-டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் ஈகிள்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதையடுத்து ராயல்ஸ் அணியும்-ஸ்மாஷேர்ஸ் அணியும் மோதின. இதில் ராயல்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிற்பகலில் கிங்ஸ் அணியும்-வாரியர்ஸ் அணியும் மோதியது. இதில் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவெங்சர்ஸ் அணியும்-ஸ்மாஷேர்ஸ் அணியும், ஈகிள்ஸ் அணியும்-ராயல்ஸ் அணியும், பட்ரியட்ஸ் அணி-டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.