விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு… கோர்ட் அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை.

வருவாய்த் துறை அரசாணை எண்:515 நாள்25.08.2008-ன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை, குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வை முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று தமது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, :வருவாய்த்துறை அரசாணை எண்:515 – நாள்25.08.2008-ன் படி கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு “A” பிரிவு மற்றும் “B” பிரிவு என நடைபெறும்.

ஆனால், நாகர்கோயில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு “A” பிரிவு, “B” பிரிவு மற்றும் இரண்டு பிரிவுகளையும் சேர்த்து பொதுவான கலந்தாய்வு என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது அரசாணைக்கு எதிரானது

எனவே, பழைய முறைப்படி, வருவாய்த்துறை அரசாணை எண்:515 நாள்25.08.2008-ன் படி இந்த இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கினை நீதிபதி முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.