கரூரில் அதிமுக ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார், தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என கூறினார். மேலும், பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, பொதுக்குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது? அங்கு பாதுகாப்பு இல்லை.
கொள்ளை காரனும், கொலை காரனும் கட்சி நடத்துகிறார்கள். எல்லோரும் விரைவில் ஜெயிலுக்கு போக போகிறார்கள். கட்சி காப்பாற்றப்பட வேண்டும், எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி இது தமிழகத்தில் DVAC சரியாக செயல்படவில்லை என எடப்பாடி சொல்வது சரி. ஏனென்றால், வேலுமணி, கொடநாடு உள்ளிட்ட பல வழக்குகள் அப்படியே உள்ளது. அவர்களை கைது செய்யவில்லை, அதனால்தான் விடியா அரசு என்று இந்த அரசை பேசுகிறார்கள்.
ஜெயலலிதா வழக்கு பற்றி சி.வி.சண்முகத்துக்கு என்ன தெரியும். அம்மா இறக்கும்போது நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டது. பழனிசாமி தலைமையில் எதுவும் நடக்காது, பூச்சாண்டி காட்டுகிறார்கள். பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி மீட்டெடுக்கப்படும். பணம் இருப்பதற்காக பழனிச்சாமி பின்னால் சுற்றுகிறார்கள். கரூர் விரைவில் நிச்சயமாக அண்ணன் தலைமையில் அதிமுக கோட்டையாக மாறும் என்று புகழேந்தி பேசினார்.