ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மொராக்கோ மக்களின் இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோ நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.