திம்பு,
7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி கண்டிருந்தது. இந்த சூழலில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பூட்டானுடன் இன்று மோதியது.
இதில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் பூட்டானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அனுஷ்கா குமாரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.