உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.54 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 46 லட்சத்து 56 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

கொரோனா கட்டுப்பாடுகள்; ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

புதுடெல்லி, உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  கடந்த ஜனவரியில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு 2 வார கால தடை விதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உலக நாடுகளில் தொடர்ந்து ஏற்பட்ட ஒமைக்ரான் பரவலை சுட்டி காட்டி இந்த தடை அமலுக்கு வந்தது.  இதனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா … Read more

பிரீமியர் லீக் கால்பந்து : ரொனால்டோ ஹாட்ரிக் கோல் – மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி

பிரீமியர்  லீக் கால்பந்து  நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் –  நார்விச்  சிட்டி அணிகள் மோதின . இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் மான்செஸ்டர் யுனைடெட் ஆதிக்கம் செலுத்தியது .அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் ,32 வது நிமிடத்தில் ,76 வது நிமிடத்தில் என ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் . நார்விச் அணியில் கீரன் டோவெல் 45 வது நிமிடத்திலும் ,டீமு புக்கி 52 வது நிமிடத்த்தில் கோல் அடித்தனர் .2 … Read more

அமெரிக்க உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்

வாஷிங்டன்,  உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தங்களின் சொந்த ஆராய்ச்சிக்காவும், வணிக ரீதியிலும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.13 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோளை … Read more

கர்நாடகத்தில், பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் – ஜே.பி.நட்டா

பெங்களூரு, கர்நாடக பா.ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விஜயநகருக்கு வருகை தந்தார்.  பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:- 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை … Read more

ஐபிஎல் : மில்லர்,ரஷித் கான் அதிரடி – சென்னை அணியை வீழ்த்தி குஜராத் 'திரில்' வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  குஜராத் – சென்னை  அணிகள் மோதின. குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்பட்டார்.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில்  டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது.அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்  ,ராபின் உத்தப்பா … Read more

சீன நகரில் கொரோனா எழுச்சியால் 3-வது விமானம் தாங்கி கப்பல் கட்டுமானம் பாதிப்பு

பீஜிங்,  சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில், 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. கண்டிப்புடன்கூடிய ஊரடங்கு அந்த நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வீடுகளுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர். ஆனாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு … Read more

குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா சென்னை?

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி (லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (5 ஆட்டங்களில் 228 ரன்கள்), சுப்மான் கில் (200 ரன்கள்), டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார்கள். வேகப்பந்து வீச்சில் லோக்கி பெர்குசன் (8 விக்கெட்), முகமது ஷமி (7 விக்கெட்) ஆகியோர் அசத்துகின்றனர். சுழற்பந்து வீச்சில் ரஷித் … Read more

பாகிஸ்தானில் பஞ்சாப் புதிய முதல்-மந்திரியாக பிரதமரின் மகன் தேர்வு

லாகூர், பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து, கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார்.  அவரும் அதனை ஏற்று கொண்டார்.  இதனையடுத்து, பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது.  பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 2ந்தேதி காலை 11 … Read more

மொரீஷியஸ் பிரதமர் 8 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகை

புதுடெல்லி, மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான 17-ந்தேதி(இன்று) அவர் இந்தியாவிற்கு வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் உடன் வருகிறார்.  இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும், அவர் டெல்லி, குஜராத், வாரணாசி உள்ளிட்ட இடங்களிலுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.