டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு

புதுடெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளையொட்டி டெல்லி அரசு மலிவு விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 101 அடல் உணவகங்களை தொடங்கி அதில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக இன்று ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட 45 இடங்களில் அடல் உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் மேலும் 55 உணவகங்கள் திறக்கப்படும்.ஜங்புரா சட்டமன்றத் தொகுதியின் … Read more

பீகார் அணி 574 ரன்கள் குவிப்பு: உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – அஸ்வின்

மும்பை, 33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.’பிளேட்’ வகைப்பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது.இந்த நிலையில், உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் – ஜெலன்ஸ்கி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 401வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை நீண்ட இழுபறிக்குப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் போர் … Read more

பல நோய்களுக்கு செயற்கை உரமே காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

போபால், மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், விவசாயிகளின் வருமானம் குறையாது. மாறாக, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தூய்மையானதாக இருக்கும். இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும். மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும். நாடு முழுவதும் … Read more

3வது டி20: இந்தியா – இலங்கை அணிகள் நாளை மோதல்

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி … Read more

கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து விளக்கம்

புதுடெல்லி, தாய்லாந்து, கம்போடிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 2 வாரங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மோதலில் எல்லை பகுதியில் இருந்த விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘தாய்லாந்து- கம்போடியா எல்லை பிரச்சினை நீடித்து வரும் பகுதியில் அமைந்துள்ள இந்து தெய்வ சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை பார்த்தோம். இந்து மற்றும் புத்த தெய்வங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி … Read more

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி, தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் கம்போடியா பகுதியில் இருந்த 29 அடி உயர விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவம் இடித்து அகற்றியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:- தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். … Read more

இத்தாலி நடிகர் ஆன்ட்ரியா பிரெடியை திருமணம் செய்த வீனஸ் வில்லியம்ஸ்

புளோரிடா, அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 7 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இத்தாலி நடிகரும், மாடலிங் துறையை சேர்ந்தவருமான ஆன்ட்ரியா பிரெடியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். கடந்த செப்டம்பரில் இவர்களது திருமணம் இத்தாலியில் எளிய முறையில் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வீனஸ்-ஆன்ட்ரியா பிரெடி மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்காவின் புளோரிடா … Read more

பெத்லகேமில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

காசா, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே இஸ்ரேல்-காசா போர் காரணமாக பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இயேசு பிறந்த பெத்லகேமில் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக மேஞ்சர் சதுக்கத்தில் இடிபாடுகளுக்கும் முள்வேலிகளுக்கும் மத்தியில் குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காசாவில் போர் போர் நிறுத்தம், ஏற்பட்டதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் … Read more

பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி – 2 பெண்கள் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் கோயல். இவரது மகன் ரித்தம். கடந்த நவம்பர் 5-ந்தேதி ரித்தமுக்கும், யஷஷ்வி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 14-ந்தேதி, அம்போலி பகுதியில் உள்ள ஓட்டலில் ரித்தம் தனது நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்த பிறகு ரித்தம், யஷஷ்வி, அவரது தம்பி ஆகியோர் ஓட்டலில் உள்ள லிப்ட்டில் தரைத்தளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த லிப்டில் மற்றொரு பெண் ஏறினார். திடீரென … Read more