இன்று திருப்பதி கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

திருப்பதி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது. வழக்கமாக இந்த உற்சவம் கோகர்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் நடக்கும். தற்போது மழை பெய்து வருவதாலும், புயல் உருவாகி உள்ளதாலும் வைபவ உற்சவ மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமியை வைபவ உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு சென்று … Read more

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் : சென்னையில் கடல் சீற்றம்

சென்னை வங்கக் கடலில் மிக்ஜம் புயல் உருவானதால் சென்னையில் காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.   தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட … Read more

இன்று பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை  முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நடந்து வருகிறது. இதில்  5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களின் வசதிக்காகப் பெங்களூரு நகரில் இன்று மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு … Read more

திங்கட்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிலைய விடுமுறை

செங்கல்பட்டு கன மழை காரணமாக சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். ’மிக்ஜம்’ எனப் பெரியடப்படுள்ள இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ஆம் … Read more

நாடெங்கும் மிக்ஜம் புயலை முன்னிட்டு 144 ரயில்கள் ரத்து

டில்லி மிக்ஜம் புயல் குறித்த எச்சரிக்கையை முன்னிட்டு நாடெங்கும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். ’மிக்ஜம்’ எனப் பெரியடப்படுள்ள இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5ஆம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே … Read more

சபாநாயகர் அப்பாவுவையும் தரகர்கள் மூலம் மிரட்டிய அமலாக்கத்துறை  

திருநெல்வேலி தம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்துள்ளன இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற … Read more

பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் : காவல்துறை

சென்னை பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக இது வலுப்பெறக்கூடும். பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு  ந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு … Read more

வரும் 15 ஆம் தேதிக்குள் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் தயார் : யோகி அறிவிப்பு

அயோத்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக அயோத்தியில் உள்ள விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், … Read more

மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கியவர் கேட்கும் ரூ.3 கோடி இழப்பீடு

சான்ஃப்ரான்சிஸ்கோ மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார். இவர் டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக் கொண்டே இருந்தார். பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக தாக்கினார்.  டைசன் … Read more

மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணச் சலுகை திட்டம்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 செலுத்திப் பயணிக்கும் சலுகை திட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை  ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையைப் பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் … Read more