மூத்த காங்கிரஸ் தலைவர் கே சங்கரநாராயணன் காலமானார்

பாலக்காடு: பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சங்கரநாராயணன், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. சங்கரநாராயணன் மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியவர். மேலும் அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்புகளை வகித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மற்றும் கேரளாவில் பல்வேறு அரசாங்கங்களில் நிதி, கலால் மற்றும் … Read more

ஆஸ்கர் விழாவில் கிரிஸ் ராக்குக்கு அறைவிட்ட வில் ஸ்மித்… ஈஷா மையத்தில் சத்குருவை காண இந்தியா வருகை…

‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின் தலைமுடி குறித்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் அடித்த கமென்டிற்கு நிகழ்ச்சி மேடையில் அறைவிட்டார் வில் ஸ்மித். இதனைத் தொடர்ந்து வில் ஸ்மித்தை 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வில் ஸ்மித் நேற்று மும்பை வந்து இறங்கியதாகவும் ஜூஹூ-வில் உள்ள மரியாட் … Read more

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் மட்டும் 34 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் இன்று மொத்தம் 18,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்த நிலையில் 334 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 34 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 10 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. … Read more

ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில் 2015 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 54 … Read more

கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம்

உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி தவிர ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு ஆகிய தமிழ்நாட்டின் மூன்று கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையில் புகழ்பெற்ற அமைப்பான சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி – ICID), யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய … Read more

9,999 ராதிகாக்கள் தேவை! தமிழர்கள் கவனிக்க!

தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ராதிகா சரத்குமார். ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அவருக்கு, தொழிற்துறையில் செய்த சாதனைகளுக்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது அளிக்கப்பட்டது. தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, … Read more

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் – மோடி

Millions of people in the country have benefited from digital money transactions – Modi புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் என்று மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மனதின் குரல் நிகழ்ச்சி பேசிய மோடி, மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய … Read more

அதிமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு

சென்னை: அதிமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகளில் 10% அளவிற்கு வழிகாட்டி மதிப்பை குறைத்து முத்திரைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது தற்போது தெரிய வந்துளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள், சார் பதிவாளருக்கு தணிக்கைத்துறை சுற்றறிக்கையில், 2014-19 வரை சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் ரூ 4.5 கோடிக்கு பத்திரபதிவில் மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,390 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் … Read more

அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம்

புதுச்சேரி: அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்கின்றனர். அவரை வரவேற்க புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாலையை மறைந்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு காரணமாக அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி செல்ல முடியாமல் சிக்கி கொண்டது. இதில் அலங்கார வளைவு … Read more