கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளி- கல்லூரிகள் திறக்கபட்டதோடு, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. … Read more

உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெனிவா: உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்த்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சமீபத்திய புள்ளி விபரங்களில் படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 50.84 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 508,429,686 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,239,987 … Read more

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில்

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் கும்ரம்லையில் அமைந்துள்ளது. வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! போரிஸ் ஜான்சன் உறுதி

டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் இடையே பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேச்சு … Read more

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.28.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி

கோயமுத்தூர்: கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை எழிலகத்ததில் உள்ள  போக்குவரத்துதுறை அலவலகத்தில் தமிழக போக்குவரத்து துறை  துணை ஆணையராக இருப்பவர் நடராஜன் அறையிலும், அவரது உதவியாளர் முருகன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 35 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது. இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் கோவையில் ரூ.28 லட்சம் லஞ்சப்பணம் … Read more

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம்! திமுகவுக்கு தோள் கொடுக்கும் கே.எஸ்.அழகிரி

கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம் என ஆளும்  திமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது என தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 19ந்தேதி சட்டப்பேரவையில் கூறினார். ஆனால், அவரது வாய்முகூர்த்தம், அடுத்தடுத்த நாட்களில் … Read more

குடிப்பதற்கு வழிகாட்டும் சினிமா கதாநாயகர்கள்! தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். ஜெய் க்ருஷ் கதிர் , பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது, “கலை வடிவம் ஏதாவது ஒரு … Read more

மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு பறக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு செல்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது அவரது 3வது வெளிநாட்டு பயணம் என்று கூறப்படுகிறது. கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது நோய் குறித்து ஆரம்பத்தில் தெரிய வந்ததும், கடந்த 2018ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, தொடர் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு … Read more

விமல் மீது சிங்காரவேலன் மோசடி புகார்!

தன்னை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டதாக, நேற்று(ம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். கடந்த மூன்று வருடங்களாகவே இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விமல், சென்னை காவல்துறை மாநகர ஆணையரக அலுவலகத்தில் சிங்காரவேலன் மீது புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார் சிங்காரவேலன். அப்போது அவர் பேசியதாவது: “நான் மெரினா … Read more

23/04/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சென்னை வந்தவர். இதன்மூலம்  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து500 ஆக அதிகரித்துள்ளது. … Read more