செல்பி எடுக்க முயன்ற சிறுவனை காணவில்லை

மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்து காணாமல்  போயுள்ளார்.  இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவரே கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று  மாலை காணாமல் போன சிறுவன் … Read more

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – செய்திப் பார்வை

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியை 230 ரூபா வரை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,     Source link

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன்! – ஜனாதிபதிக்கு அமைச்சர் எழுதிய கடிதம்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் … Read more

பொலன்னறுவை இராச்சியத்தின் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு! (Photo)

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகக் கருதக்கூடிய சிவலிங்கத் தளம் அல்லது கல்லை தொல்பொருள் திணைக்களம் மற்றும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இன்று (07) கண்டுபிடித்துள்ளனர். பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் படி இந்த சிவலிங்கத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலகட்டம், அதாவது கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் கட்டமைப்புகள் தொழிநுட்பம் கொண்டவையாகக் கருத முடியும் என பொலன்னறுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் பி.எச்.நளின் … Read more

தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுங்கள்! இலங்கைக்கு பிரித்தானியா அழைப்பு

பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் பல மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட அறிக்கை தொடர்பான ஊடாடும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், … Read more

சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா! – அமைச்சர் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். On the request of HE … Read more

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி  இது தொடர்பான அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில்,  வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் … Read more

கோவிட் தொற்றுக்குள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு

கோவிட்  தொற்றுக்கு உள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது பிரசவத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என வைத்தியர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான வதந்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். Source link

பசிலின் அதிரடி அறிவிப்பால் கொந்தளிக்கும் சிங்கள மக்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார். போதிய மழையின்மையினால் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி … Read more

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றம்

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சேவை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  அமைச்சு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த பதற்றமான சூழல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில் குறித்த கட்டடம் பல உரிமையாளர்களைக் கொண்டது … Read more