புலஸ்தினி நாட்டை விட்டு வெளியேற உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி விடுதலை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (20) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் என்பவர் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான தகவலைத் தெரிந்தும் அதனை மறைத்தமை தொடர்பிலும் அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த … Read more

திடீர் அதிஷ்டம் தேடிவரும் மிதுன ராசியினர்! அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன் (video)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும். கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நாளைய தினம் கிரகங்களின் சேர்க்கையால் அதிஷ்டங்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம், உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது … Read more

இலங்கை அமைச்சர் குழுவொன்று இன்று தென்னாபிரிக்கா பயணம்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று இன்று காலை தென்னாபிரிக்கா சென்றுள்ளது. இலங்கை அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்’ பணியை முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான அனுபவத்தைப் பெறுவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு முன்னதாக, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ. ஷால்க், தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மை … Read more

உங்களுக்கு இவ்விடங்களில் மச்சம் இருக்கின்றதா? அப்போ உங்களுக்கு அதிஷ்டம் தான்!!

மனிதர்களின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் உள்ளதோ அவர்களுக்கு அதிஷ்டம் உண்டு என்பார்கள். பலருக்கு பல இடத்தில் மச்சம் இருக்கும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறிதளவாக காணப்படும். ஆனால் வளர வளர அதுவும் வளர்ந்து விடும். இதனால் பல நன்மைகள் ஏற்படும். அவை எவை என பார்ப்போம்,   நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் இருப்பார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.  நெற்றியில் வலது பக்கம் இருந்தால் வறுமை இருந்தாலும் நேர்மையுடன் … Read more

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்: அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அதிரடியான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அறிவிப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான கடனுதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பல மறுசீரமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். Source link

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி பெயர்களிலும் ஆலயங்களில் மட்டுமே உள்ளது! கல்லாறு சதீஸ் (Video)

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி பெயர்களிலும், ஆலயங்களில் மட்டுமே உள்ளது என கல்லாறு சதீஸ் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறி ஊடகத்தின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் உள்ள இரண்டாம் தலைமுறையினர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர். ஆனால் தமிழ்மொழி மூன்றாம்,நான்காம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுமா என்பது மிகவும் கேள்விகுறியான ஒன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை எமது … Read more

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களை காணவில்லை

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற  நான்கு இளைஞர்கள்  காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  எல்லேவல நீர்வீழ்ச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 10 பேர் கொண்ட குழு அங்கு நீராடச்சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன இளைஞர்கள் காணாமல் போன இளைஞர்கள் காத்தான்குடி மற்றும் அக்கரப்பற்று பிரதேசங்களை  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர் குளிப்பதற்கு அனுமதியில்லை என பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார் … Read more

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள நிதி! உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அமைச்சர், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.  எனது தனிப்பட்ட கருத்து  அரசியலமைப்பின் பிரகாரம் பணத்தின் … Read more

இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டு தாவரம்

மத்திய மலைநாட்டின் உலர் வலயங்களில் பரவிவரும் தாவர வகை பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பேராதனை தாவரவியல் பூங்காவின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அச்சலா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உரித்தற்ற வெளிநாடொன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட இந்தத் தாவர இனத்தை ஹட்டன், பதுளை, பண்டாரவளை போன்ற பகுதிகளில் அவதானிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதுபற்றி விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கலாநிதி அச்சலா ரட்நாயக்க மேலும் தெரிவித்தார். Source link

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி!ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்குதாரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் கடனாளிகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடுமையான நிதி முகாமைத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி இலங்கைக்கான விரிவான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சற்றுமுன்னர் … Read more