மகிந்தானந்தவிடம் மன்னிப்பு கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்! வெளியான அறிக்கை

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த 10ஆம் திகதி இரவு வெளிநாடொன்றுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பிலே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் இருவரும் பணி இடைநீக்கம் அறிக்கையை வெளியிட்ட அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், பெறப்பட்ட தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் வேறொரு நபருடையது எனவும், நாடாளுமன்ற … Read more

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த தினத்தில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.  … Read more

எரிபொருள் நிலையங்கள் மூடப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்

பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது. எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என … Read more

வாகன ஓட்டுநர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வின் நன்மை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது நுகர்வோருக்கு வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி விலை திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எரிபொருளின் விலையில் நிச்சயமாக ஓரளவு குறையும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளமையினால் கிடைத்த நன்மை இலங்கையிலுள்ள எரிபொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுமா என வினவப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு … Read more

நிதியமைச்சருக்கு தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பணத்தை விடுவிக்குமாறு நிதியமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை இன்றைய தினம் (13.03.2023) நிதியமைச்சர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை கொடுப்பது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். … Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலர் வீழ்ச்சியுடன், எரிபொருள் இறக்குமதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை குறையும் விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக … Read more

விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்தது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி  அதிகரிப்பின் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்துள்ளது.  சுமார் ஐந்து வீதமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரிவடைந்த டொலரின் மதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   Source … Read more

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம்

கண்டியில் நேற்று(11.03.2023) சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அலவத்துகொட பகுதியை சேர்ந்த 26 வயதான தனுக வதுவந்தி என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்த நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர். குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் தாய்க்கு கணவன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டது. பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் … Read more

இலங்கையில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள்

பெரும்பாலான இலங்கையர்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களின் வருமான பதிவுகளை அழைக்காமலேயே சட்ட உதவி வழங்கப்படுகிறது. சனத்தொகையை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான பராமரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்! வெளியான காரணம்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக இரவு நேற்று (10.3..2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மத்துகம நீதிமன்றில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகிந்தானந்த அளுத்கமகே தனது வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்துள்ளார். வெளிநாட்டு பயணத்தடை எனினும், தமக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என … Read more