கர்நாடகா: வலைதள பதிவால் வெடித்த வன்முறை; நள்ளிரவில் காவல்நிலையம் மீது தாக்குதல் – 12 காவலர்கள் காயம்

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை அந்த நபரைக் கைது செய்துள்ளது. போலீஸ் தடியடி இந்த நிலையில், அவர் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையில் திருப்தியடையாததால், நள்ளிரவில் கும்பல் ஒன்று கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களை வீசி … Read more

Kgf-2 : "வடசென்னை படம் பாத்துட்டுதான் கேஜிஎப் டைரக்டர் கூப்பிட்டார்" – சரண் சக்தி

`கடல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கவனத்தை ஈர்த்து, வடசென்னை படத்தில் பிரபலமான நடிகர் சரண் சக்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே ஜி எப் -2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவருடனான நேர்காணல் இதோ: கே ஜி எப் -2 போன்ற பெரிய திரைப்படத்தில் நீங்கள் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? KGF Chapter 2 இவ்வளவு பெரிய படத்தில் நான் ஒரு கதாப்பாத்திரம் என்று சொல்லும்போது அதைவிட … Read more

உணவு டெலிவரி ஊழியரை நடுரோட்டில் ஷூவால் அடித்த இளம்பெண்… வைரலான வீடியோ – என்ன நடந்தது?

உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் Zomato, Swiggy, Uber போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை, நடுரோட்டில் மக்கள் முன் இளம்பெண் ஒருவர் ஷூவால் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த … Read more

Kgf -2 படத்துக்காக Beast படக்காட்சிகள் குறைக்கப்பட்டதா? – விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

கே.ஜி.எஃப் -2 படத்திற்கு ஏற்கெனவே 350 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று விஜய்யின் ‘பீஸ்ட்’டும், அதனைத் தொடர்ந்து 14-ம் தேதியன்று யஷ் நடித்த கே.ஜி.எஃப் -2 படமும் வெளியானது. இதில் பீஸ்ட் படத்துக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு கே.ஜி.எஃப் -2 படத்திற்கான திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. என்ற தகவல் கோடம்பாக்கத்தில் உலாவுகின்றன. இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியத்திடம் … Read more

தூத்துக்குடி பாகம்பிரியாள் திருக்கோயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரதவீதிகளில் வலம் வந்த திருத்தேர்!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருத்தேர் கயத்தாரைத் … Read more

5,500 அடி உயரத்தில் சித்திரை முழுநிலவுத் திருவிழா; கண்ணகி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்குத்தொடர்ச்சிமலை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்குக் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் கேரளாவின் குமுளியில் … Read more

Vikram: சேது டு பொன்னியின் செல்வன்; `கலைத் தாயின் செல்வன்' நடிகர் விக்ரமின் திரைப்பயணம்!

எத்தனை படங்கள், எத்தனை கதாபாத்திரங்கள்…! தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் தந்து பார்வையாளர்களை அசர வைக்கும் விக்ரமுக்கு இன்று பிறந்த நாள்…! 1990 `என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்குள் நுழைந்தார் விக்ரம். தனது ஆரம்ப காலங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறைகளில் பணியாற்றியவர். ஆரம்ப காலங்களில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பாலாவின் ‘சேது’ அவரை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று பல விருதுகளை பெற்றுத்தந்தது. ஒரு … Read more

"இனி நீங்கள் 'Tata Neu' ஆப் மூலம் டாடாவின் கார்களை வாங்கலாம்" -டாடா டிஜிட்டல் CEO!

அண்மையில் டாடா நிறுவனம் ‘டாடா நியூ (Tata Neu)’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏர் இந்தியாவின் விமான டிக்கெட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியது. மேலும் பண பரிவர்த்தனை செய்துகொள்ளும் டாடா வாலட்டையும் (Neu digital wallet) அறிமுகப்படுத்தியது டாடா. அதைத்தொடர்ந்து தற்போது டாடா மோட்டார்ஸின் கார்களை டாடா நியூ செயலியைப் பயன்படுத்தி வாங்கும் வசதியை கொண்டுவரவுள்ளது. மேலும் ‘தனிஷ்க்(Tanishq)’, ‘ஏர் இந்தியா (Air India)’, … Read more

வட இந்தியாவில் விற்கமுயன்ற நடராஜர் சிலை… தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியைச் சேர்ந்த பிரபாகரன் (27), பைசல் அகமது(27), அய்யம்பேட்டை சக்கரா பள்ளியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (26) ஆகிய மூன்று இளைஞர்கள் உலோக நடராஜர் சிலை ஒன்றைக் கடத்தி வைத்துக் கொண்டு விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை இதனை தொடர்ந்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பைபாஸ் ரோட்டில், கடத்தப்பட்ட சிலையை விற்பனை செய்வதற்கான … Read more

"கறி சோறு, வடை பாயாசம் கச்சேரில மட்டும்தான் கிடைக்கும்" – நினைவுகள் பகிரும் அந்தோணிதாசன்

நாட்டுப்புற பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகமாக ஜொலிப்பவர் அந்தோணிதாசன். `ஃபோக் மார்லே’வாக தனிப்பாடல்களில் ஈர்க்கிறார். சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’யிலும் கலக்கியிருந்தார். வெற்றி பெற்ற ஒவ்வொரு கலைஞனுக்குப் பின்னாலும், சோகங்கள், அவமானங்கள் இருக்கும் என்பதை அந்தக் கலைஞர்கள் வாழ்க்கையில் பார்க்கமுடியும். இதற்கு உதாரணமாக அந்தோணிதாசனின் வாழ்க்கையையும் சொல்லலாம். அதை அவரே பகிர்கிறார். “அப்பா பிறந்த ஊரைத்தான் பூர்வீகமா சொல்றது வழக்கம். அந்த வகையில என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் பக்கம் இருக்கற இளையான்குடி பக்கத்துல வடக்கு கீரனூர். … Read more