5,500 அடி உயரத்தில் சித்திரை முழுநிலவுத் திருவிழா; கண்ணகி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்குத்தொடர்ச்சிமலை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்குக் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் பக்தர்கள் கேரளாவின் குமுளியில் … Read more

Vikram: சேது டு பொன்னியின் செல்வன்; `கலைத் தாயின் செல்வன்' நடிகர் விக்ரமின் திரைப்பயணம்!

எத்தனை படங்கள், எத்தனை கதாபாத்திரங்கள்…! தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் தந்து பார்வையாளர்களை அசர வைக்கும் விக்ரமுக்கு இன்று பிறந்த நாள்…! 1990 `என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்குள் நுழைந்தார் விக்ரம். தனது ஆரம்ப காலங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறைகளில் பணியாற்றியவர். ஆரம்ப காலங்களில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பாலாவின் ‘சேது’ அவரை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று பல விருதுகளை பெற்றுத்தந்தது. ஒரு … Read more

"இனி நீங்கள் 'Tata Neu' ஆப் மூலம் டாடாவின் கார்களை வாங்கலாம்" -டாடா டிஜிட்டல் CEO!

அண்மையில் டாடா நிறுவனம் ‘டாடா நியூ (Tata Neu)’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏர் இந்தியாவின் விமான டிக்கெட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியது. மேலும் பண பரிவர்த்தனை செய்துகொள்ளும் டாடா வாலட்டையும் (Neu digital wallet) அறிமுகப்படுத்தியது டாடா. அதைத்தொடர்ந்து தற்போது டாடா மோட்டார்ஸின் கார்களை டாடா நியூ செயலியைப் பயன்படுத்தி வாங்கும் வசதியை கொண்டுவரவுள்ளது. மேலும் ‘தனிஷ்க்(Tanishq)’, ‘ஏர் இந்தியா (Air India)’, … Read more

வட இந்தியாவில் விற்கமுயன்ற நடராஜர் சிலை… தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியைச் சேர்ந்த பிரபாகரன் (27), பைசல் அகமது(27), அய்யம்பேட்டை சக்கரா பள்ளியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (26) ஆகிய மூன்று இளைஞர்கள் உலோக நடராஜர் சிலை ஒன்றைக் கடத்தி வைத்துக் கொண்டு விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை இதனை தொடர்ந்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பைபாஸ் ரோட்டில், கடத்தப்பட்ட சிலையை விற்பனை செய்வதற்கான … Read more

"கறி சோறு, வடை பாயாசம் கச்சேரில மட்டும்தான் கிடைக்கும்" – நினைவுகள் பகிரும் அந்தோணிதாசன்

நாட்டுப்புற பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகமாக ஜொலிப்பவர் அந்தோணிதாசன். `ஃபோக் மார்லே’வாக தனிப்பாடல்களில் ஈர்க்கிறார். சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’யிலும் கலக்கியிருந்தார். வெற்றி பெற்ற ஒவ்வொரு கலைஞனுக்குப் பின்னாலும், சோகங்கள், அவமானங்கள் இருக்கும் என்பதை அந்தக் கலைஞர்கள் வாழ்க்கையில் பார்க்கமுடியும். இதற்கு உதாரணமாக அந்தோணிதாசனின் வாழ்க்கையையும் சொல்லலாம். அதை அவரே பகிர்கிறார். “அப்பா பிறந்த ஊரைத்தான் பூர்வீகமா சொல்றது வழக்கம். அந்த வகையில என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் பக்கம் இருக்கற இளையான்குடி பக்கத்துல வடக்கு கீரனூர். … Read more

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், இலங்கையின் தமிழ் பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்காதது ஏன்?!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயர்ந்ததோடு, அனைத்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி காரணமாக அங்கு, ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் இலங்கையின் தென் பகுதிகளில் மட்டுமே பெரிய அளவில் நடந்துவருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணங்களில் இதுபோன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற செய்திகளே அங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? சிங்களர்களோடு கைகோர்த்த … Read more

24 மணி நேர இடைவெளியில் எஸ்.டி.பி.ஐ, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கொலை… பதற்றத்தில் கேரளம்!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த எலப்புள்ளி குப்பையோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபைர்(43). எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்த நிலையில், சுபைர் நேற்று முன் தினம் மதியம் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன் தந்தை அபுபக்கரையும் அழைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். எலப்புள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சுபைரின் பைக் மீது திடீரென ஒரு கார் மோதி உள்ளது. பைக்கில் இருந்த சுபைரும், அவர் தந்தையும் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஏப்ரல் 18 முதல் 24 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link