உடல் ஆரோக்கியம், விளையாட்டுகளில் சாதிக்க குழந்தைகளுக்கான கூடம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகர் முழுவதையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டன.  இதற்கிடையில் கோவையில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க மாணவ,மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. … Read more

ஜெயக்குமார் பேசக்கூடாது! புகழேந்தி கடும் சாடல்!

கரூரில் அதிமுக ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார், தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என கூறினார்.  மேலும், பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, பொதுக்குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது? அங்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை காரனும், கொலை காரனும் கட்சி நடத்துகிறார்கள். எல்லோரும் விரைவில் ஜெயிலுக்கு போக போகிறார்கள். கட்சி காப்பாற்றப்பட வேண்டும், எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி … Read more

'தமிழ்நாட்டில் ராணுவ வீரரையே மிரட்டுகின்றனர்…' – சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு, அதனை நாடு முழுவதும் பரப்பும் வகையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ. 27) நடைபெற்றது. இந்த பயணத்தில், 15 நாட்களில் 6000 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக … Read more

உணவு டெலிவரிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்… சென்னையில் தொடக்கம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பிகாஸ் (BGauss), கோ சாப் (GoZap) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.  இதன்படி, உணவு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை டெலிவரி செய்யும் தனியார்  நிறுவன ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.   … Read more

விஜய் சேதுபதி சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

இந்தியாவில் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் & KGISL Educational Institutions கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் (2022- டிசம்பர் 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி)  மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கம் 3 நாட்களில் 20000+ இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவது.  தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், மக்கள் மனதில் … Read more

என்னைய தாண்டி எப்படி போறேன்னு பார்க்கலாம்! வழிமறித்த காட்டு யானை!

உதகையிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப்பாதையில் நாள்தோறும் கர்நாடக கேரளா பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.  36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும்.  மலைப்பாதையில் அவ்வப்போது யானை, சிறுத்தை ,கரடி ,காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் சாலையில் திடீரென உலா வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டது இதனால் … Read more

7 மாதம் வீட்டை விட்டு வெளியேறிய நபர்! திரும்பி எப்படி வந்தார் என்று பாருங்கள்!

பலரும் உடல் பருமன் குறித்து மிகவும் கவலையடைந்திருப்பீர்கள். உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி என பலவற்றையும் நீங்கள் முயற்சித்திருப்பீர்கள். ஆனால், அவை எதுவும் உங்களுக்கு கைக்கொடுத்திருக்காது. எனவே, நீங்கள் மீண்டும் சோர்வடைந்து, உடல்நலத்தை பேண தவறிவிடுவீர்கள்.  அதேபோன்றுதான் அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கும் உடல் பருமனை குறைப்பதில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடும் பின்னடைவுகளுக்கு பின்னரும் துவண்டு விடாமல் அவர் எடுத்த மாற்று முயற்சி அவரின் உடல் எடையை குறைப்பதில் எவ்வாறு பலனளித்தது என்று … Read more

சாப்பாட்டுக்கு பணமில்லை… பசியால் கதறி அழுத 2 வயது மகளை கொன்ற ஐடி ஊழியர்…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கென்டாட்டி என்ற கிராமத்தின் ஏரியில், 2 வயது குழந்தையின் உடல் நேற்று முன்தினம் (நவ. 28) இரவு அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையில் உடலை மீட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில், ஏரிக்கரையோரம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு நீல நில கார் ஒன்றும் இருந்துள்ளதை பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் ஒருவரை நேற்று கைது செய்தனர். … Read more

உதயநிதி நடந்தால் ஊர்வலம்; உட்கார்ந்தால் பொதுக்கூட்டம் – திமுக அமைச்சர்!

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு திருமுல்லைவாயில் சோழாழம்பேடு பகுதியில் சுமார் 2000 பொதுமக்களுக்கு வேட்டி சேலை, 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உடை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் வழங்கினார்.  விழா மேடையில் பேசிய அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழச்சியை பழித்து பேசிய காரணத்திற்காக கனகமிசையின் தலையில் கல்லைக் கொண்டு வந்து … Read more

OPS-ஐ சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயார்! ஆனால்… – ஆர்.பி. உதயகுமார் வைத்த செக்

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்துடன் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமண நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.சுப்பையாபுரத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி திருக்கோவிலில் ஆர்.பி.உதயக்குமார் தனது குடும்பத்தினருடன் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து நேற்று (நவ. 27) பூஜை … Read more