களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – பாடசாலை பெண் அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. ஆசிரியர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு மாணவிகளின் உதவியை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலதிகமாக பிரதேசத்தில் உள்ள அரசியல் பிரபலத்தின் உதவியுடன் செயற்படும் அதிபர் அந்த … Read more

ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

வருடாந்த ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் உள்ள போர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (மே 04) இடம்பெற்றது. நேற்று மாலை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களை ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் அதிமேதகு லெவன் எஸ்.டகர்யன் வரவேற்றார். ரஷ்யர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9ஆம் திகதி “பெரிய தேசபக்தி போரின்” முடிவு தினமாக இந்நிகழ்வை கொண்டாடுகிறார்கள். … Read more

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமை மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவினாலும், சீனி ஒரு கிலோகிராமின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திரும்ப பெறப்பட்ட வரி விலக்கு கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திரும்ப பெறப்பட்டதையடுத்து, கோதுமை மாவின் … Read more

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு … Read more

"ஈழத்தை புலிகள் அழிக்கவில்லை” கஜேந்திரன் ஆவேசம்(Video)

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு மட்டுமே இந்த இராணுவமும் பொலிஸாரும் துணை போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.தையிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் உலகத்திடம் இருந்து பெறப்படுகின்ற நிதியில், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு சம்பளம், சீருடை, சாப்பாடு மற்றும் வாகனம் என வழங்கப்படும் அனைத்தும் தமிழர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தபடுகின்றன. இந்த பிராந்தியம் 2009 … Read more

சம்பளம் மற்றும் சகல கொடுப்பனவுகள்! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர் எதிர்வரும் செவ்வாய்கிழமை(09.05.2023) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற  முடியுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல … Read more

மர்மமாக உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

 களுத்துறை நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி மேலும் மூவருடன் தற்காலிக தங்குமிடத்திற்குள் நுழைந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு மேலும் இரு இளைஞர்கள் மற்றும் சிறுமி ஒருவருடன் வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், … Read more

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! காலநிலை தொடர்பான அவசர அறிவிப்பு

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடல் கொந்தளிப்பு நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை எனவே, 5 – 10 வடக்கு அட்சரேகைகள், 90 – 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 – 4 வடக்கு அட்சரேகைகள், 85 – 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு … Read more

வெளிநாட்டிற்கு பறந்த பசில் ராஜபக்ச…!

முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார். பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று(07.05.2023) காலை புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில் அதிகாலை 03.15 மணியளவில் இருவரும் துபாய்க்கு புறப்பட்டுள்ளனர். Source link

ஜனாதிபதி ரணிலின் கேள்விக்கு மன்னர் சார்லஸ் வழங்கியுள்ள பதில்!

மன்னர் சார்லஸிற்கு மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று (06.05.2023) முடிசூடினார்.   சாதகமான பதில்  இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சார்லஸ் மன்னரை சந்தித்த போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இதன்போது மீண்டுமொருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி மன்னர் சார்லஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு … Read more