வெளிநாட்டில் வேலைக்காகப் பயணம் செய்யும் இலங்கைப் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,  மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். வேலைவாய்ப்பில் பல்வேறு … Read more

இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமானால் இதுவே தீர்வு: ரணில் பகிரங்கம்

“இனப்பிரச்சினைதான் நாட்டின் முன்னேற்றத்தைக் குறைத்தது. எனவே, இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் நடத்தப்பட்ட ‘சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளிலான உரையாடலில் பிரதான உரையை ஆற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பசுமைப் பொருளாதாரத்துக்கான இலங்கையின் சாத்தியக்கூறுகள் நன்றாக இருக்கின்றன. இலங்கை உடனடியாக அதில் இறங்கி அதனை … Read more

தென்னிலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தென்னிலங்கையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றைய நபர் படுகாயங்களுடன் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 48 வயதுடைய குடும்பஸ்தரும் உயிரிழப்பு கோர விபத்தில் கார் சாரதியான 55 வயதுடைய குடும்பஸ்தரும், காரின் முன் ஆசனத்தில் இருந்து பயணித்த அவரது 27 … Read more

பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலைகளில் ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடல் மூலம் ஆங்கில மொழி அறிவினை மேம்படுத்தும் … Read more

தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார்ப்பு

2030 ஆம் ஆண்டளவில், தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் 51ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்னைச் செய்கையின் புதிய நடைமுறைகள் குறித்து விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தில் இன்று (30) நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை … Read more

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பேருவளை கரையோர பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இந்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் சிறிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுனாமி அச்சுறுத்தல் பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்கல் ஒரு மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை…..

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளை (31) நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. எனினும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் நாளை (31) காலை 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி … Read more

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உள்ளூர் கல்வித் துறைக்கான STEAM கல்வியைத் தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் நாளை(31.03.2023) மேல் மாகாணத்தில் கொழும்பு, நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார். புதிய வேலைத்திட்டம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) கல்வியைத் தொடங்குவதற்கான வேலைத்திட்டம் நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை தொடரும். முக்கிய நிகழ்வை ஒட்டி,எஞ்சிய … Read more

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிலிப் குணவர்தன நினைவுதின நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்று, விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். நினைவுதின நிகழ்வில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வரலாற்றாசிரியர், கலைத்துறை … Read more

'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு' திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

‘பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி’ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (துஐஊயு) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் … Read more