உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அமைய ஏற்றுமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா பணிப்புரை விடுத்தார். அரசாங்க நிதி பற்றிய குழுவில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அண்மையில் (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது. தற்பொழுது ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்காக அறவிடப்படும் 14% வரியை 30% வரை அதிகரிக்கும்போது இதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருமானம் … Read more

மாகாண சபை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,  ”மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) நாடாளுமன்றத்தில் … Read more

மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்

மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – மின்சார சபை பிரதிநிதிகள் தேசிய பேரவை உப குழுவில் அறிவிப்பு எதிர்வரும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய … Read more

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாற்றம் தேவை

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் ஆயுர்வேதத்தை இணைக்க யோசனை – தேசிய பேரவை உப குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ  பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாற்றம் தேவை  ஆயுர்வேத வைத்தியத் துறையின் நிலைபேறான தன்மை மற்றும் அதன் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அதனை  அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் இணைப்பது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப  குழு அண்மையில் (26) கவனம் … Read more

முறையான திட்டமிடலின்றி அபிவிருத்தித் திட்டங்கள் – பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது

முறையான திட்டமிடலின்றி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  ⏩ முறையான திட்டமிடலின்றி அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதால் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது..   ⏩ அதுவும் இன்று கட்டுமானத் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம்…    ⏩ அபிவிருத்தித் திட்டங்களை விட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே வரவு செலவுத் திட்டத்தின் முதன்மையான கவனம்…    ⏩ ஆனால் நாம் அத்தியாவசியமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்… … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பான விழிப்புணர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புனர்வு பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (30) நடைபெற்றது. காணி தொடர்பான புதிய நடைமுறைகள் மற்றும் அரச காணி தொடர்பான சட்டங்கள் மற்றும் சுற்று நிருபங்களின் அடிப்படையில் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டல்களை தெளிவுபடும்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுகின்ற சட்டங்களையும் சுற்றுநிருபங்களையும் பின்பற்றி பணியினை … Read more

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  Source link

லங்கா சதொச நிறுவனத்தின் வருமானம் 400% அதிகரிப்பு

உணவு பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ,இன்று (30)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் லங்கா சதொச நிறுவனத்தின் வருமானம்  400% அதிகரித்துள்ளது. நட்டத்தை எதிர்கொண்டிருந்த லங்கா சதொச நிறுவனத்தின் வருமானம் 2022 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மாத்திரம் 5,389 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது என்றும் … Read more

“எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானவர்களை சமமாக நடத்துவோம் – அவர்களின் உரிமையை பாதுகாப்போம் “

எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானவர்களை சமூகத்தில் ஓரங்கட்டாமல் சமமாக கருதி அவர்களின் சமத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஜனக வேரகொட தெரிவித்தார். நாளை டிசம்பர் முதலாம் திகதி சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நாளை (டிசம்பர் 01) நடைபெறவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினம் ஒவ்வொரு … Read more

கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள்:அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில்…….

பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம். பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முன்மொழிவை அமைச்சரவையின் அனுமதிக்கு முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன தெரிவித்தார். எதிர்காலத்தில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் … Read more