ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் ,தெஹிவளையில் இளைஞர் கைது!

ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் மாத்திரைகளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 6.115 கிராம் ஹெரோயின் மற்றும் 147 மாத்திரைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெஹிவளை களுபோவில பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் நுகேகொட நீதவான் முன்னிலையில் இன்று (5) ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அல்ஹிக்மா வித்தியாலயத்தின் பெயர் மாற்றம்

அல்ஹிக்மா வித்தியாலயம்தின் பெயர்  மாற்றப்பட்டுள்ளது.  2013ம் ஆண்டு க/ அல்ஹிக்மா வித்தியாலயம் என ஆரம்பிக்கப்பட்ட ,பாடசாலை 2022 ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதல் க/ எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலை என உத்தியோகபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.    மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் இந்த பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது 2013ம் ஆண்டு க/ அல்ஹிக்மா வித்தியாலயம் என ஆரம்பிக்கப்பட்ட ,பாடசாலை 2022 ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதல் க/ எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலை என … Read more

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை

தற்போதைய சூழ்நிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனவே கோதுமை மாவை முன்னைய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், கூடுதலான விலைக்கு விற்பனைசெய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தரப்பினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார் ஜாஎலயிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். … Read more

மீனவர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்புமற்றும்காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில்பலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் … Read more

“செல்பி” எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழப்பு

ஹல்துமுல்ல, சன்வெலி தோட்ட பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் “செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் அருவியை பார்வையிட வந்துள்ளார். அங்கு புகைப்படம் எடுக்க முற்பட்ட போது அவரது கால் வழுக்கி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார். அந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து இளைஞரின் … Read more

இன்று முதல் தொலைபேசி சேவைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்களையும், தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மொபைல், தரைவழிதரைவழி தொலைபேசி (லேண்ட்லைன்) மற்றும் புரோட்பேண்ட் (அகன்ற அலைவரிசை) கட்டணங்கள் மற்றும் ஏனைய முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளன. மேலும், கட்டணம் செலுத்தி பார்வையிடும் தொலைக்காட்சி சேவைகளின் கட்டணத்தை இன்று முதல் 25 … Read more

சுகாதாரத் துறையை விரைவில் மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கான அவசர பொறிமுறைமை … Read more

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள் பாவனை தேசிய எரிபொருள் விநியோக அனுமதி பத்திரத்தின் பாவனை, எண்ணெய் சுத்திகரித்தல் மற்றும் எண்ணெய் விநியோகம் தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் தேவையின் … Read more

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 'மகத்தான மனிதாபிமான பதிலளிப்பு' வேண்டும் – பாகிஸ்தான்

1,265 பேரை பலிகொண்ட  பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘மகத்தான மனிதாபிமான பதிலளிப்பு’ வேண்டும் என்று பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 33 மில்லியன் மக்களுக்கு உதவுமாறு மகத்தான மனிதாபிமான நடவடிக்கைக்கு அந்நாட்டு  திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் சர்வதேசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நிவாரண உதவிகள் தொடர்பாக அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.  மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக சுமார் 10 பில்லியன் அமெரிக்க டேரலர் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.