டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க பாதுகாப்பு பேரவை ஆலோசனையின் பேரில் ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் மேலும் பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காகவும், ஜூலை 11 – 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறும் தெரிவித்தே டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த … Read more

கருப்பு ஜூலை பயங்கரவாத அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

கறுப்பு ஜூலை பயங்கரவாத அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை, எனினும், அது நிராகரிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் உளவுத்துறை தகவல் தொடர்பாக பாதுகாப்பு செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கறுப்பு ஜூலையை முன்னிட்டு இம்மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலனாய்வு வட்டாரங்கள் மூலம் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இத்தகைய தாக்குதல் குறித்த … Read more

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (04) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதேவேளை ,நேற்றைய தினம் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இவர்கள் பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினை காரணமாக தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள், நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து தாமும் தீர்வைக் … Read more

திருடன் என்று அழைக்காதீர்கள்! நாமல் ராஜபக்ச விடுக்கும் கோரிக்கை

ஒருவரை ஒருவர் ஹொரா(திருடன்) என்று அழைப்பதை நிறுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று அழைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை . எனது குடும்ப உறுப்பினர்களோ நானோ எந்த எரிபொருள் … Read more

சுமார் 15 பவுசர்கள் எரிபொருள் சேமித்து வைத்து சட்ட விரோதமான முறையில் விற்பனை

சுமார் 15 பவுசர்கள் எரிபொருளை சேமித்து வைத்து சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 953 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளிலேயே இந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 884 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் 15 பவுசர்களுக்கு சமமானதாகும். அந்த எரிபொருட்களில் 27,001 லீட்டர் … Read more

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பிரதமர் தலைமையிலான அரசாங்கமொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, பிரதமர் தலைமையிலான அரசாங்கமொன்றை ஜனாதிபதி நியமித்துள்ள போதிலும் குறிப்பிட்ட சிலர் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் வேலையை செய்து வருவதாக சபை முதலவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று (04) பாராளுமன்றம் கூடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு பாரிய எரிபொருள் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தினேஷ் … Read more

எட்டி உதைத்த இராணுவ அதிகாரி – காணொளியை பதிவு செய்த இளைஞருக்கு கொலை அச்சுத்தல்

குருநாகல் யக்கஹபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர், எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞரை உதைத்ததை பதிவு செய்த இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக காணொளியை பதிவு செய்த இளைஞர் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் வழித்தடத்தில் இருந்த இளைஞரை இராணுவ வீரர்கள் சிலர் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் … Read more

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டம்

கொழும்பில் ‘பார்க் அண்ட் ரைட் சிஸ்டத்தின்’ கீழ் சேவையில் ஈடுபடுத்த இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிற்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிப்பதை குறைப்பதற்காக மாகும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் மூன்று இடங்கள் காவலரண் நிறுவப்பட்டுள்ளன. மேலும், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 100 பஸ்கள் வாடகைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும், … Read more

எரிபொருள் தொடர்பான அறிக்கையை ஜூலை 12ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எரிபொருளை கொள்வனவு செய்தல்இ மற்றும் விநியோகத்தின் முன்னுரிமை ஆகிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஜூலை 12 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இன்று (04) உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (04) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனை மற்றும் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. நீதியரசர்களான விஜித் மலல்கொட, மஹிந்த … Read more

இரு வீட்டார்களுக்கு இடையில் கைகலப்பு: ஒருவர் கைது

மண்வெட்டி தாக்குதலுக்கு உள்ளான நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு வீட்டார்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவம் நேற்று(03) இடம்பெற்றுள்ளது. இதன்போது மண்வெட்டி தாக்குதலுக்கு உள்ளான நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் இந்த கைகலப்பில் திருகோணமலை-04ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 38வயதுடைய பிரசாத் சந்தன என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட … Read more