50-60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஜூலை 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்குமாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது! அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான உயிர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.   கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அவிறிப்பை வெளியிட்டுள்ளார்.   பிற்போடப்பட்ட பரீட்சை இதன்படி,  ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி  அளவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த  வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை  ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார் நடைமுறை … Read more

உயர் தர பரீட்சையை எதிர்வரும் நவம்பரில் நடத்த திட்டம்

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைவாக ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பல்வேறு அமர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறினார். இந்த அமர்வுகள் கணிதம், அறிவியல், வணிகம் மற்றும் கலை ஆசிரியர்களுக்காக 17  பல்கலைக்கழகங்களை தொடர்புபடுத்தி  நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மேலும் தெரிவித்தார்.

சவாட் (savate) சர்வதேச குத்துசண்டை போட்டியில், வவுனியா, டிலக்சினி கந்தசாமிக்கு தங்க பதக்கம்

பாகிஸ்தானில் நடைபெற்ற 3 வது சவாட் (savate) சர்வதேச குத்துசண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்க பதக்கம் பெற்றுள்ளார். இவர் கோவில்குளம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவி ஆவார். தந்தையை இழந்த நிலையில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியின் காரணமாக  போட்டியில் கலந்துகொண்டு  இலங்கைக்கும்,வட மாகாணத்திற்கும்,வவுனியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் பிரதேச,மாவட்ட, மாகாண,தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்றுள்ளத்துடன் , சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட  மாணவி … Read more

தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு கோரிக்கை

தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் நிலைமைகளை சாதாரண முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக உயிர் அச்சுறுத்தல்களை கருத்திற் கொள்ளாது பணியாற்றி வரும் அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் நெருக்குதல்களுக்கு … Read more

யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையில் விசேட புகையிரத சேவை

யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான விசேட புகையிரத சேவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரச அலுவலகங்களில் பணியாற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்றுவரும் நூற்றுக்கணக்கான அலுவலர்களின் நன்மை கருதி இந்த சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல்நகர் வளாக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சேவையை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் ஊடாக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், … Read more

இலங்கை இராணுவத்தினரின் மோசமான தாக்குதல் – உலக நாடுகளின் உதவிகளை இழக்கும் அபாயம்

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் குறித்த இராணுவ அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது. இராணுவத்தினரின் தாக்குதல் இராணுவ அதிகாரி பணி என்பது மிகவும் மனிதாபிமானமிக்க ஒரு பணியாகும். அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட மனித உரிமை … Read more

இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்

அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நேரமும் முற்கூட்டியே பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு எனவே அவசர தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள், தாம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 070 63 11 711 … Read more