வாழ்க்கையில் பல பிரச்சனைகள்.. நடிக்காததற்கு அதுதான் காரணம்..மனம் திறந்த மீரா ஜாஸ்மின்!

சென்னை: தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சந்தித்தேன் என்று நடிகை மீரா ஜாஸ்மின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் தனது வசீகரமான கண்களை உருட்டி உருட்டி ரசிகர்களை வசியப்படுத்தினார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். மீரா ஜாஸ்மீன்: விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்திருந்தார் … Read more

Maamannan: நீங்க பேசுனது போதும் வாங்க: மாரி செல்வராஜ் கையை பிடித்து இழுத்து வந்த உதயநிதி.!

அண்மையில் வெளியான படங்களில் ‘மாமன்னன்’ ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று சக்கை போடு போட்டு வருகிறது. விமர்சனம் மட்டுமில்லாமல் வசூலிலும் கலக்கி வருகிறது படம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறது. இந்நிலையில் ‘மாமன்னன்’ சக்சஸ் மீட்டிங்கில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு டைட்டில் ரோலில் நடித்த மாமன்னனில் உதயநிதி ஸ்டாலின். பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்தனர். … Read more

பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அஜித்-பிரபல தயாரிப்பாளரின் ‘பகீர்’ ஸ்டேட்மெண்ட்..!

Manickam Narayanan on Ajith Kumar: நடிகர் அஜித்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல இயக்குநர் ஒருவர் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார். 

என்டர்டெயின்மென்ட் ஏரியாவில் என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்தின் மூத்த மகன் – என்ன திட்டம்?

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், உயர்ரக வகை நாய்க்குட்டிகள் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இப்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார். நடிகர் விஜய்காந்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் இருவரில், சண்முகப்பாண்டியன் ஏற்கெனவே நடிகராகிவிட்டார். ‘மதுர வீரன்’ என்ற படத்தில் நடித்த அவர் அடுத்து ‘குற்றப்பரம்பரை’ நாவலின் அடிப்படையில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கிறார். இதனிடையே சினிமா, அரசியல் இரண்டிலும் இறங்காத மூத்த மகன் விஜய பிரபாகரன், உயர்ரக நாய்க்குட்டிகளின் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். பல்வேறு நாடுகளுக்குச் … Read more

ரிஸ்க் எடுத்ததால் தான் சினிமாவில் இருக்கிறேன் – சிவகார்த்திகேயன் பேட்டி

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிகா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாவீரன்'. வரும் ஜூலை 14ல் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படக்குழுவினர் முழுவீச்சில் புரொமோஷன் செய்தி வருகின்றனர். பத்திரிக்கையாளர்களுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி : * மாவீரன் தலைப்பு ஏன்…?படத்தில் காமிக்ஸ் வரையும் சத்யா என்ற ரோலில் நடித்துள்ளேன். அந்த கேரக்டர் பெயர் மாவீரன். அதனால் இந்த தலைப்பு வைத்துள்ளோம். சமூக … Read more

Baakiyalakshmi: 18 லட்சத்தை கொடுக்கும் பாக்கியா.. டூப்ளிகேட்டா என கேட்கும் கோபி!

சென்னை: விஜய் டிவியின் முதன்மை தொடரான பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்பான எபிசோட்களால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கணவன் தன்னை கைவிட்டாலும் தன்னிடம் இருக்கும் சமையல் திறமையால் அதி விரைவிலேயே முன்னுக்கு வருகிறார் இந்தக் கதையின் நாயகி பாக்கியா. அவரது ஒவ்வொரு செயலுக்கும் குடுமபத்தினர் ஒத்துழைப்பு அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அவரின் தன்னலமில்லாத செயல்பாடுகளே இதற்கு காரணமாக அமைகிறது. பாக்கியாவின் அதிரடியால் முழி பிதுங்கும் கோபி: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராகவும் மொத்தத்தில் அர்பன் கேட்டகரியில் … Read more

Leo: லியோ ஷூட்டிங்கை முடித்த விஜய்: அப்படி இருந்த தளபதி இப்படி மாறிட்டார்

Leo Film: லியோ படத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் டப்பிங் பணியை துவங்கிவிட்டாராம். ​லியோ​மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் லியோ. கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பை துவங்கினார்கள். விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விஜய் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் விஜய் ஏற்கனவே டப்பிங் பேசத் துவங்கிவிட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.உதயநிதி ஸ்டாலின்​திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு … Read more

பிரபல நடிகையின் காதல் கணவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு…!

Police Case Against Mahalakshmi Husband Ravinder: சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2025ல் ராஜமவுலி இயக்கத்தில் 'மகாபாரதம்' ஆரம்பம்?

'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தை மட்டுமல்லாமல் ஹாலிவுட் திரையுலகத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. தனது கனவுப் படைப்பாக 'மகாபாரதம்' காவியத்தைத் திரைப்படமாக்க வேண்டும் என அவரது சில பேட்டிகளில் கூட இதற்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமவுலியின் அப்பாவும் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத், 'மகாபாரதம்' படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபு கதாநாயகனாக … Read more

ப்ளூ சட்டையில் விஜய்.. போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி.. என கொண்டாடி கொளுத்தும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் தளபதி 68 படத்தை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற முழுவதுமாக ரெடியாகி விட்டார் என்றே தெரிகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், வின்டேஜ் லுக்கிற்கு நடிகர் விஜய் மாறியுள்ள போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் சூறைக்காற்றாக சுழன்றடித்து வருகின்றன. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை இல்லாமல் வித்தியாசமாக ப்ளூ சட்டையை அணிந்து கொண்டு தனது விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பை பனையூரில் நடத்தி … Read more