தெலுங்கானா: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்.. அடேங்கப்பா பிரதமர் மோடி அசத்தல்!

மகபூப் நகர்: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் பேசுவது இல்லை என தெலுங்கானாவில் ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தி ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களையும் தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி இன்று பேசினார். மகளிர் Source Link

செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடி| GST collection rises 10 pc to over Rs 1.62 lakh cr in Sep

புதுடில்லி: செப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,62,712 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செப்., மாத ஜிஎஸ்டி வசூல் 1,62,712 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும்(பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,145 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.11,613 … Read more

நடுரோட்டில் திடீரென பற்றியெரிந்த எலக்ட்ரிக் கார்! – `தீ'-யாய் பரவும் வீடியோ

சாமானிய வாகன ஓட்டிகளின் பார்வையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கும் சூழலில், அதற்கடுத்த நகர்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பேட்டரிகளால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் கார்கள், எலக்ட்ரிக் பேருந்துகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. எலக்ட்ரிக் கார் இருப்பினும், அவற்றின் விலையும் சாமானியர்களுக்கு அதிகம்தான். அதேசமயம், மத்திய அரசு பேட்டரி வாகன விற்பனையாளர்களுக்கு வரிச்சலுகையும் அளித்துவருகிறது. இன்னொருபக்கம், அவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையாக அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். … Read more

இன்றுமுதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை  உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் றிய; ௨௦௯ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எரிவாயு சிலிண்டரின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய திருத்தப்பட்ட விலையின் படி சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இது ரூ.1,685-க்கு விற்பனையானது. டெல்லியில் புதிய விலைபடி, ரூ.1,731.50க்கு விற்பனையாகிறது. முந்தைய விலை ரூ.1522.50. கொல்கத்தாவில் ரூ.1,839.50க்கும் (முந்தைய விலை ரூ.1,636) மும்பையில் ரூ.1,684-க்கும் முந்தைய விலை (ரூ.1,482) விற்பனை செய்யப்படுகிறது. இந்த … Read more

அத்திப்பட்டி போல.. ஒட்டுமொத்த நாடும் மாயமாகுமாம்.. ஜப்பானுக்கு வல்லுநர்கள் வார்னிங்! என்ன பிரச்சினை

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இப்போது மிகப் பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தால் ஒட்டுமொத்த ஜப்பானும் உலக மேப்பில் இருந்து மாயமாகக் கூட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் மிக முக்கியமான வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது ஜப்பான். ஜிடிபி அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது. கிழக்கு Source Link

பாலியல் சித்ரவதை; `அடிமை' கொடூரங்கள்… வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!

பெண்கள் சில நேரத்தில் வீட்டில் சிறிய பிரச்னைக்கு சண்டை போட்டுவிட்டு பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், வீட்டைவிட்டு வெளியில் வந்து விடுவது வழக்கம். அப்படி வரும் பெண்கள் சில நேரங்களில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களை மர்ம ஆசாமிகள் பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றனர். மகாராஷ்டிராவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவை சேர்ந்த 22 வயது பெண் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு மும்பை நோக்கி வரும் ரயிலில் ஏறி வந்துவிட்டார். அவர் வரும் … Read more

மாவட்டச் செயலாளர்களுக்கு மு  க ஸ்டாலின் எச்சரிக்கைதிமுக

சென்னை மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்   என மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார் . இன்று திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்  மக்களவை தேர்தல் குறித்து,ம் தேர்தல் பணிகள் குறித்ததும்  கூட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது.  அப்போது மு க ஸ்டாலின், “நம்மை மக்களவை தேர்தல் எதிர்நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.  எனவே நாம் … Read more

பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ராஜஸ்தானை தட்டி தூக்கும் காங்கிரஸ்! வெளியான கருத்துக்கணிப்பு

ஜெய்பூர்: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. Source Link