அக்.21ல் ககன்யான் திட்டம் முதல்கட்ட சோதனை| Oct. Kaganyan project first test on 21st

ஸ்ரீஹரிக்கோட்டா: அக்., 21ம் தேதி காலை, 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை ஏவ ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007ல், 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு ககன்யான் என, பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. … Read more

சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் மோசடி; சிக்கிய வட இந்தியர்கள் – நடந்ததும் நடவடிக்கையும்!

சென்னை, பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில், சுங்கத்துறையின் கடைநிலைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 14-ம் தேதி நடைபெற்றது. 7 ஓட்டுநர், 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் என மொத்தம் 17 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் 1,600 பேர் பங்கேற்றனர். அப்போது, தேர்வு எழுதிய வட மாநிலத் தேர்வர்கள் சிலரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்களை சோதனை செய்து பார்த்தனர். … Read more

துபாயில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணிக்கு உடல்நலக்குறைவு பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது…

துபாயில் இருந்து சனிக்கிழமையன்று அம்ரிஸ்தர் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கராச்சியில் அவரசமாக தரையிறக்கப்பட்டது. பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக ஊழியர்கள் விமானியிடம் தெரிவித்ததை அடுத்து அருகில் உள்ள கராச்சி சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்ட விமானிக்கு அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலைய மருத்துவர்கள் குழு அந்த பயணியை பரிசோதித்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பின் … Read more

மிசோரம் சட்டசபை தேர்தல்: ராகுல் தீவிர பிரசாரம்- 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான 39 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ Source Link

குஜராத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்| Bus overturns in Gujarat: 40 injured

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் தியோதர் நகரில் இருந்து ஜூனாகத் நோக்கி அரசுப் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 55 முதல் 60 பயணிகள் இருந்துள்ளனர். பஸ் வானா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோர பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் இருந்த பயணிகளில், சுமார் 40 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அந்த பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

45 ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பு… தென்மாவட்ட மக்களின் அன்புக்கு நான் அடிமை… ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்த் பின்னர் நெல்லையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில் நான்கு நாட்கள் கலந்து கொண்டார். அப்போது கன்னியாகுமரியில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்த ரஜினிகாந்த்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்ததும் தூத்துக்குடி விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் … Read more

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பதிவுதாரர்களுக்கு Source Link

ENG v AFG: இங்கிலாந்து யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஆப்கன்; அப்செட் நிகழ்ந்தது எப்படி?

இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டியின் முந்தைய நாள் அது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் பத்திரிகையாளர் அறையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட். அப்போது அவரிடம் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. “நாளை இங்கிலாந்தை உங்களால் அப்செட் செய்ய முடியுமா?” ஒரு நொடி தாமதம் கூட இல்லாமல், Jonathan Trott “எந்த அணியையும் வீழ்த்தும் திறன் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கிறது. கடந்த போட்டிகளில் வெற்றியை நெருங்கி சென்றிருக்கிறோம். எல்லைக்கோட்டை மட்டும்தான் … Read more