மிசோரம் சட்டசபை தேர்தல்: ராகுல் தீவிர பிரசாரம்- 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான 39 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ Source Link

குஜராத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்| Bus overturns in Gujarat: 40 injured

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் தியோதர் நகரில் இருந்து ஜூனாகத் நோக்கி அரசுப் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 55 முதல் 60 பயணிகள் இருந்துள்ளனர். பஸ் வானா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோர பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் இருந்த பயணிகளில், சுமார் 40 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அந்த பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

45 ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பு… தென்மாவட்ட மக்களின் அன்புக்கு நான் அடிமை… ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்த் பின்னர் நெல்லையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில் நான்கு நாட்கள் கலந்து கொண்டார். அப்போது கன்னியாகுமரியில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்த ரஜினிகாந்த்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்ததும் தூத்துக்குடி விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் … Read more

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பதிவுதாரர்களுக்கு Source Link

ENG v AFG: இங்கிலாந்து யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஆப்கன்; அப்செட் நிகழ்ந்தது எப்படி?

இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டியின் முந்தைய நாள் அது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் பத்திரிகையாளர் அறையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட். அப்போது அவரிடம் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. “நாளை இங்கிலாந்தை உங்களால் அப்செட் செய்ய முடியுமா?” ஒரு நொடி தாமதம் கூட இல்லாமல், Jonathan Trott “எந்த அணியையும் வீழ்த்தும் திறன் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கிறது. கடந்த போட்டிகளில் வெற்றியை நெருங்கி சென்றிருக்கிறோம். எல்லைக்கோட்டை மட்டும்தான் … Read more

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது : ஜோ பைடன்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஹமாஸ் குழுவினரை முழுவதுமாக வேரறுப்பதன் மூலமே பாலஸ்தீனம் அமைவதற்கான வழி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காசா பகுதியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. மேலும், மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் காசா … Read more

ம.பி.: 144 வேட்பாளர்கள் அறிவிப்பு- சீட் மறுக்கப்பட்ட சீனியர்கள் கூண்டோடு ராஜினாமா- காங்கிரஸ் ஷாக்!

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தங்களுக்கு சீட் மறுக்கப்பட்ட சீனியர்கள் சிலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. Source Link

அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்: ம.பி, ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக-வுக்கு கைகொடுக்குமா இலவசங்கள்?!

பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றிக்காக இலவசங்கள் கொடுப்பதாக தொடர்ந்து அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். பா.ஜ.க. பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது. அதேசமயம் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் 100 யூனிட் மின்சாரம் … Read more