“ சென்னை சங்கமத்தை நடத்திய தங்கை, இப்போது இந்திய சங்கமத்தை நடத்தியிருக்கிறார்!" – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் அக்டோபர் 14 அன்று, தி.மு.க மகளிரணி சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறும் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்போது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து முக்கிய பெண் தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து, இன்று மாலை ஐந்து மணியளவில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் முதல்வர் … Read more

ICC ODI WorldCup 2023 : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் விளையாட பணித்தது. 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆலவுட் ஆன பாகிஸ்தான் இந்திய அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 86 ரன்கள் கில் 16, விராத் கோலி 16 எடுத்து அவுட்டானார்கள் ஷ்ரேயஸ் 53 ரன்கள் மற்றும் … Read more

\"சீக்ரெட் ஆவணம்..\" ஹமாஸ் பிளான் என்ன! இஸ்ரேல் கைகளில் சிக்கிய அந்த டாக்குமெண்ட்.. மொத்தம் 2 பிளானாம்

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் தாக்குதல் தொடரும் நிலையில், கொல்லப்பட்ட ஹமாஸ் பயரங்கவாதிகளிடம் இருந்து இஸ்ரேல் சில டாப் சீக்ரெட் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் மிக மோசமான தாக்குதல்களை நடத்தினர். ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி காசா எல்லையில் உள்ள இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்தும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். Source Link

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து| PM Modi congratulates Indian team for defeating Pakistan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இன்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இது உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) அங்குரார்பனமும், நாளை கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழாவும் கோலாகலமாக தொடங்குகின்றன. பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட … Read more

மகளிர் உரிமை மாநாடு: "பெண்கள் நிமிர்ந்து நின்று போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!" – கனிமொழி

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று மாலை ஐந்து மணியளவில், திமுக சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் இந்த மாநாடு தொடங்கியது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி , டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மகளிர் உரிமை மாநாடு மாநாடு … Read more

 தீட்சிதர்களுக்கு சிதம்பரம் கோவில் கனகசபை நடைமுறையில் அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை  நடைமுறையில் தீட்சிதர்களுக்கு அதிகாரம்  இல்லை என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை இந்த மனுவுக்கு  தாக்கல் செய்த பதிலில் … Read more

2 பக்கமும் இடி.. “போற உசுரு இங்கேயே போகட்டும்”.. காசாவில் சிக்கிய பெற்றோர்.. புலம்பும் நாசா விஞ்ஞானி

காசா: ஹமாஸ் படையை அழிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசாவுக்குள் தரை வழியாக ஊடுருவியுள்ளனர். இந்நிலையில், தன்னுடைய பெற்றோர் காசாவில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் மரணம் குறித்தும் நாசா விஞ்ஞானி ஒருவர் உருக்கமாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை Source Link

IND vs PAK: 155/2 டு 191/10 – பாகிஸ்தானின் வீழ்ச்சியும் பௌலிங்கில் இந்தியாவின் மிரட்டல் கம்பேக்கும்!

போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாபர் அசாம், “எங்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிக்காட்டி ஹீரோக்களாக மாறப்போகிறோம்” என்றார். ஆனால், அவர் பேசியதற்கு மாறாகத்தான் போட்டியில் நடந்து கொண்டிருக்கிறது. அஹமதாபாத்தில் நடந்து வரும் போட்டியில் பாகிஸ்தான் அணியை 191 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இந்திய அணி அசத்தியிருக்கிறது. IND vs PAK “நாங்களும் முதலில் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்ய நினைத்தோம்!” என அதிருப்தியுடன்தான் பாகிஸ்தானை பேட்டிங் ஆட வைத்தார் பாபர் அசாம். ஆனாலுமே, தொடக்கத்தில் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் வகையில்தான் … Read more

சோனியா, பிரியங்கா பங்கேற்கும் திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது.

சென்னை தற்போது சென்னை நந்தனத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கும் திமுக மகளிர் உரிமை  மாநாடு நடந்து வருகிற்து. தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் … Read more