Panic in Bengaluru due to movement of leopards | சிறுத்தை நடமாட்டம் பெங்களூரில் பீதி

பெங்களூரு : இதுவரை கிராம பகுதிகளில் தென்பட்ட சிறுத்தை, தற்போது பெங்களூரின் மத்திய பகுதி அருகில் நடமாடுவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில், அவ்வப்போது சிறுத்தை நடமாடி, பீதியை கிளப்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் உள்ள பள்ளியொன்றில் சிறுத்தை புகுந்தது. இந்த வீடியோ உலகம் முழுதும் பரவியது. அதன்பின் அடுக்குமாடி குடியிருப்பில் நடமாடியது. இப்போது நகரின் சாலை நடுவில் நடமாடியுள்ளது. ஒயிட்பீல்டு கூட்லுகேட் அருகில் நேற்று முன் தினம் இரவு, சிறுத்தை நடந்து சென்றுள்ளது. இந்த … Read more

அடுத்த 3 மணி நேரத்துக்கு 18 தமிழக மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு 18 தமிழக மாவட்டங்களில் மழை  பெய்யலாம் என அறிவித்துள்ளது. தற்போது இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 18 மாவட்டங்களில் … Read more

Tamil News Live Today: Andhra Train Accident: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்! – 6 பேர் பலி, பலர் காயம்!

Andhra Train Accident: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்! – 6 பேர் பலி, பலர் காயம்! ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், ரயில்வே காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர். ஒரு ரயில் … Read more

கேரள குண்டு வெடிப்பு : தமிழக ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை மட்டுமின்றி நாடெங்கிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை … Read more

In Kerala, a religious worship hall followed by a bomb blast! Two women were killed; More than 45 people were injured | கேரளாவில் மத வழிபாடு கூடத்தில் அடுத்தடுத்து… குண்டு வெடிப்பு! இரு பெண்கள் பலி; 45க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொச்சி:கேரளாவில் மத வழிபாட்டு கூடத்தில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இவற்றில், இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது, பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணைக்கு விரைந்துள்ளனர். கேரளாவில் மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் … Read more

Kerala Bomb Blast: `குண்டு வெடிப்பில் ஈடுபட்டது, நான்தான்!' – போலீஸில் சரணடைந்த நபர்; முழு விவரம்!

கேரள மாநிலம், கொச்சின், களமசேரியில் சாம்றா இன்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன் சென்டரில் யாக்கோபா சாட்சிகள் சபைகளின் மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி நடந்த நிலையில், நிறைவுவிழா இன்று நடந்தது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். காலை சுமார் 9:40 மணியளவில் அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடித்த பகுதிகளில் தீ மளமளவென எரிந்தது. அதில் ஒரு பெண் மரணமடைந்துள்ளார். 36 பேர் காயம் அடைந்துள்ளனர். டிஃபன் பாக்ஸில் வைத்திருந்த … Read more

அரசு நிதியில் ஆன்மீகப் பயணம் : 300 பேரைத் தேவு செய்ய முடிவு

சென்னை அரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு ஆன்மீகப் பயணம் செய்ய 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில் அமைச்சர், ”2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ‘ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் … Read more

6 பேர் பலி.. ஏராளமானவர்கள் படுகாயம்.. ஆந்திரா ரயில் விபத்துக்கான ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு

அமராவதி: ஆந்திராவில் இன்று இரவு ஒரே தண்டவாளத்தில் சென்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பாலசா பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று Source Link

Andhra train accident: Modis condolence | ஆந்திர ரயில் விபத்து : மோடி இரங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:ஆந்திரா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தார். மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். புதுடில்லி:ஆந்திரா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது. … Read more