There is no bar to investigate the case against Ponmudi! | பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை!…

புதுடில்லி :’அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் மறு விசாரணை செய்வதற்கு, எந்த தடையும் விதிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நடவடிக்கை சரியானது எனக்கூறி, அதில் குறுக்கிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், அமைச்சர் மீதான வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, 1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி … Read more

டெல்லியில் லேசான நிலஅதிர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்று மாலை நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று மாலை 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் உணரப்பட்டது. நிலஅதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக, கடந்த 3ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி … Read more

மீனவர்கள் கைது விவகாரம்: `மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்!' – கிருஷ்ணசாமி

“நவம்பர் 8-ம் தேதிக்குள் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருக்கிறார். மீனவர்களுடன் கிருஷ்ணசாமி சமீபத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களின் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை. இதனால் கடலுக்குச் செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள், அந்தப் பகுதி மீனவர்கள். இலங்கை சிறையிலுள்ள 64 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி நடந்த … Read more

தமிழக மக்களுக்கு தீபாவளி போனஸ்… நவம்பர் 13ம் தேதி கூடுதல் பொது விடுமுறை…

நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை முதலே மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.* இந்த ஆண்டு தீபாவளி ஞாயிறன்று வரும் நிலையில் மறுநாள் திங்களன்று வேலை மற்றும் கல்வி நிலையங்களுக்கு திரும்ப மிகவும் சிரமம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதலாக நவம்பர் 13 ம் தேதி திங்களன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18ம் தேதி … Read more

World Cup: Bangladesh beat Sri Lanka by 3 wickets | உலககோப்பை:இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

புதுடில்லி: உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி. வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன் எடுத்தது. இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று (நவ.,6) டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. இதில் ‛டாஸ்’ வென்ற … Read more

“கெஜ்ரிவாலைக் கைதுசெய்தால், சிறையிலேயே அமைச்சரவைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்போம்!" – ஆம் ஆத்மி

டெல்லியில், 2021-ல் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி அரசின் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் ராவத் ஆகியோரை, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து, சிறையிலடைத்திருக்கிறது. இந்த வழக்கில் தற்போது மூன்றாவது நபராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த முன்வந்திருக்கிறது அமலாக்கத்துறை. மணீஷ் சிசோடியா – கெஜ்ரிவால் – சஞ்சய் சிங் இது தொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தபோதும், `இந்த சம்மன் பா.ஜ.க-வின் … Read more

நாய்களை பயமுறுத்திய எந்திரன்… ரோபோக்களிடம் இருந்து செல்லப்பிராணிகளை பாதுகாக்க புதிய சட்டமா ?

சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாய் வடிவிலான ரோபோக்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இந்த வடிவிலான ரோபோக்கள் பார்ப்பதற்கு நாய் போன்ற வடிவில் உள்ளதால் இதனைப் பார்த்து புதியவர்கள் சற்று மிரட்சி அடைகின்றனர் என்பதால் பல்வேறு இடங்களில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் அத்துமீறுவோரை கண்காணிக்க இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. The Machines are here … And it’s time to work on a policy, … Read more

விடிஞ்சா தேர்தல்.. சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்.. குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை தொடங்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் தேர்தல் அதிகாரிகள் 3 பேரும் பலத்த காயமடைந்ததால் பதற்றம் நிலவுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும் நவம்பர் 17-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் Source Link

Hiralal Samaria sworn in as Central Information Commissioner | மத்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:நம் நாட்டின் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா, 63, பதவியேற்றார்.மத்திய தகவல் ஆணைய தலைவராக பதவி வகித்து வந்த ஒய்.கே. சின்ஹாவின் பதவி காலம், கடந்த அக்டோபரில் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்த பதவி காலியாகவே இருந்தது. இதையடுத்து, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஹீராலால் சமாரியா பதவியேற்றுக் கொண்டார்.புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி … Read more

அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு 195 Km/hr – EICMA 2023

வரும் நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள சர்வதேச சந்தைக்கான அல்ட்ராவைலட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F77 பைக் மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 195 கிமீ வரை கொண்டிருக்கலாம் என டீசர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2023 மோட்டார் கண்காட்சி நவம்பர் 7-12 வரை நடைபெறுகின்றது. இந்தியாவிலிருந்து ராயல் என்ஃபீல்டு, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் அல்ட்ராவைலட் என மூன்று நிறுவனங்கள்பங்கேற்கின்றன. Ultravoilet F77 F77 எலக்ட்ரிக் பைக் … Read more