சிக்கிம்: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்; மீட்புப்பணிகள் தீவிரம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, குழந்தை, பெண் உட்பட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிரபல சுற்றுலாத்தலமான நாது லா பகுதியில், காங்டாக்-நாது லாவை இணைக்கும் ஜவஹர்லால் நேரு மார்க்கின் 15-வது மைல் கல்லில் காலை 11 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிக்கிம் பனிச்சரிவு இது குறித்து செக்போஸ்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனம் டென்சிங் பூட்டியா, “பாஸ்கள் 13-வது மைலுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. … Read more

5 ஆண்டுகளுக்கு எந்த காரையும் தொடக்கூடாது.! பிரித்தானியருக்கு விதிக்கப்பட்ட வித்தியாசமான தடை

கடந்த 29 ஆண்டுகளாக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் வழக்கமான பிரித்தானிய குற்றவாளிக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த காரையும் தொடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள பென்னிங்டனில் வசிக்கும் 44 வயதான அந்தக் குற்றவாளியின் பெயர் பால் ப்ரீஸ்ட்லி (Paul Priestley), அவர் கார் கதவுகளைத் திறந்து பார்க்க முயன்றபோது சிசிடிவி கமராவில் சிக்கினார். மார்ச் 25 மற்றும் மார்ச் 26-க்கு இடையில் மூன்று வெவேறு சந்தர்ப்பங்களில், அவர் ஆர்டன் நார்த்கேட்டில் உள்ள … Read more

பிளேபாய் இதழுக்கு போஸ் – சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் அமைச்சர்

International bbc-BBC Tamil EPA பிரான்ஸ் அமைச்சர், ப்ளேபாய் பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் பிளேபாய் இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிடும் பிளேபாய் இதழில், அமைச்சரின் பேட்டி அட்டைப்படமாக வந்துள்ளது சியாப்பாவின் அரசியல் எதிரிகள் மற்றும் சொந்தக் கட்சியை சேர்ந்த நபர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது. “அமைச்சரின் நடவடிக்கை தற்போது நிலவும் சூழலுக்கு பொருத்தமானது அல்ல,” என்று பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்ன் … Read more

பிரபல தாதா தீபக் பாக்சர் மெக்சிகோவில் கைது| Famous Dada Deepak boxer arrested in Mexico

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : புதுடில்லியில் தேடப்பட்டு வரும் பிரபல தாதாவான தீபக் பாக்சரை, வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், போலீசார் நேற்று கைது செய்தனர்.புதுடில்லியில், ‘கோகி’ என்ற ரவுடி கும்பலின் தலைவராக, 2021 செப்டம்பர் முதல் தீபக் பாக்சர் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பல்வேறு அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு ஆக., 23-ல், புதுடில்லியில் உள்ள புராரியில், பில்டிங் கான்ட்ராக்டர் அமித் குப்தா என்பவரை, தீபக் … Read more

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தினத்தந்தி Related Tags : கொரோனா பரிசோதனை புதுச்சேரி Corona test Puducherry

லண்டனில் நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்… பொலிஸ் குவிப்பால் தெரியவந்த தகவல்

தென் லண்டனில் மிச்சம் பகுதியில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த நிலையில் இளைஞர் குறித்த நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொலைக்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மாநகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பெடிங்டன் லேன் சந்திப்புக்கு அருகில் உள்ள குரோய்டன் சாலையில் காயமடைந்த நிலையில் அந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை 2.25 மணியளவில் குரோய்டன் சாலையில் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை அவசர … Read more

'காதலில் விழுங்கள்' – சீன கல்லூரிகளின் இந்த சுற்றறிக்கைக்கு என்ன காரணம்?

International bbc-BBC Tamil Getty Images சீனா, காதல், மக்கள் தொகை சீனாவில் உள்ள ஒன்பது கல்லூரிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து “காதலில் விழுங்கள்” என்று சுற்றறிக்கை மூலம் கூறி இருக்கிறது விடுமுறையின் போது, பயண அனுபவங்களை குறிப்புகளாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கல்லூரிக்கு திரும்பி வரும் போது சமர்பிக்கவும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூறி இருக்கிறது. விடுமுறை அளித்த கல்லூரி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் … Read more

மேற்கவங்க வன்முறை: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு| West Bengal violence: Center seeks report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :ராம நவமி பண்டிகையின் போது நடந்த வன்முறை குறித்து விரிவான அறிக்கை தரும்படி, மேற்கு வங்க கவர்னருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், கடந்த 30ல் கொண்டாடப்பட்ட ராம நவமி பண்டிகையின் போது, இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில், வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இது தொடர்பாக, 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து, … Read more

சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி; மத்திய மந்திரி அமித்ஷா இரங்கல்

கேங்டாக், சிக்கிமில் கேங்டாக்-நாட்டு லா சாலையில் 15-வது மைல்கல் அருகே இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்கு உடனடியாக விரைந்தனர். இதில் இதுவரை, 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். எனினும், அவர்களில் 7 பேர் உயிரிழந்து விட்டனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார். … Read more