அழுகிய கை: “தவறுதலாக ஊசிப்போடப்பட்டதா? விசாரணை குழு போடப்பட்டிருக்கிறது"- அமைச்சர் மா.சுப்ரமணியன்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த குறைப் பிரசவத்தில் பிறந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு தலையில் ரத்தக் கசிவு, நீர் கசிவு இருப்பதாக, குழந்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென குழந்தையின் வலது கை மட்டும் அழுகத் தொடங்கியிருக்கிறது. இதற்கு குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது கவனக்குறைவாக இருந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மா.சுப்பிரமணியன் இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “குறைப்பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் … Read more

மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவி ஏற்ற அஜித் பவார்

மும்பை அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.   அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் உடனான மோதலால் கட்சியை அஜித் பவார் உடைத்தார். இதையொட்டி தேசியவாத காங்கிரசிலிருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  இன்று அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் … Read more

மக்கள் மகாராஷ்டிரா அரசியல் விளையாட்டைப் பொறுக்க மாட்டார்கள் : சஞ்சய் ராவத்

மும்பை மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருடன் மராட்டிய ஆளுநரை சந்தித்தார். தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் … Read more

நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து

ஈரோடு நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இன்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுல்லது. அதில், “நாளை திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ரயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில்) ஈரோட்டிலிருந்து காலை 6.25 மணிக்குப் புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். ரயில் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் ரயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு … Read more

இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் பெயரில் போட்டியிட அஜித் பவார் முடிவு

மும்பை தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்தார். அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நடந்து வந்தது. இன்று எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு 26 … Read more

இன்றைய ராசிபலன் 03.07.23 | Horoscope | Today RasiPalan | திங்கட்கிழமை | July 03| Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்கின்றனர். அங்குள்ள பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக இதை எதிர்க்கின்றனர். கடந்த மே 3 ஆம் தேதி முதல் … Read more

"அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்" – அஜித் பவார் திட்டவட்டம்

மும்பை, மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். அவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது அமைந்துள்ள அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்தையும் செய்வோம். சில எம்.எல்.ஏ.க்கள் வெளியூரில் இருப்பதால் தொடர்பு கொள்ள … Read more

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவார்… கட்சியையே உடைத்த அஜித் பவார் – அரசியல் சதுரங்கம்: 2019 முதல் இன்று வரை…

மும்பை, 2019 மராட்டிய தேர்தல்:- மராட்டிய சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி:- தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றன. தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி சேர்ந்து … Read more

`ஊழல்வாதிகள் என்று சொன்னவர்களுக்கு அமைச்சர் பதவி; பிரதமர் மோடிக்கு நன்றி!' – சரத் பவார் கருத்து

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், இன்று கட்சியை உடைத்துக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பா.ஜ.க-சிவசேனா (ஷிண்டே) அமைச்சரவையில் சேர்ந்திருக்கிறார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பேட்டியளித்த அஜித் பவார், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு நன்றாக முன்னேறி வருகிறது. மற்ற நாடுகளிலும் மோடி பிரபலமாக இருக்கிறார். அவரையும், அவரது தலைமையையும் அனைவரும் ஆதரிக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தல் … Read more